தமிழில் டிஆர் இயக்கத்தில் வெளியான 'காதல் அழிவதில்லை' படம் மூலம் அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சார்மி தற்போது இயக்குநர் புரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார்.

vgdf

Advertisment

இந்நிலையில்நடிகை சார்மி அடுத்து தயாரிக்கவுள்ள படத்திற்கு அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் இதுகுறித்து தனது காதலர் புரி ஜெகன்னாத்திடம் கூற, அவர் சார்மிக்கு ஸ்டோரி ரைட்டிங் என்ற புத்தகத்தைக் கொடுத்ததாகவும், அந்தப் புத்தகத்தை அவர் படித்துக் கூடிய விரைவில் ஸ்கிரிப்ட் ரைட்டராக மாறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செய்தி அவர் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment