'சக்ரா' படம் குறித்து பரவிய வதந்தி... படக்குழு மறுப்பு! 

vishal

'ஆக்‌ஷன்' படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம் 'சக்ரா'. புதுமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிக்கப்படவில்லை. கரோனா அச்சுறுத்தல் முழுவதுமாக முடிந்து, மீண்டும் தமிழ்ப் பட ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைத்தவுடன் இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் இறுதிக்கட்ட பணிகளும் முடிக்கப்பட்டு திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர்தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதனால் படமும் இந்த நான்கு மொழிகளில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. அனைத்துத்தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் முதல் விஷால் படம் இதுவாகும். இதற்கு முன்பு விஷால் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும், இந்த முறைதான் மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

மேலும்,இந்தப் படத்தின் ட்ரைலர்தற்போது வெளியானவுடன் சமூகவலைத்தளங்களில் 'சக்ரா' படம் ஓ.டி.டி. பிளாட்ஃபார்மில் வெளியாகப்போகிறது என்று செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது படக்குழு. 'சக்ரா' படம் திரையரங்கில்தான் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

vishal
இதையும் படியுங்கள்
Subscribe