Skip to main content

'சக்ரா' படம் குறித்து பரவிய வதந்தி... படக்குழு மறுப்பு! 

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

vishal

 

'ஆக்‌ஷன்' படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம் 'சக்ரா'. புதுமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிக்கப்படவில்லை. கரோனா அச்சுறுத்தல் முழுவதுமாக முடிந்து, மீண்டும் தமிழ்ப் பட ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைத்தவுடன் இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் இறுதிக்கட்ட பணிகளும் முடிக்கப்பட்டு திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதனால் படமும் இந்த நான்கு மொழிகளில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. அனைத்துத் தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் முதல் விஷால் படம் இதுவாகும். இதற்கு முன்பு விஷால் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும், இந்த முறைதான் மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

 

மேலும், இந்தப் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானவுடன் சமூக வலைத்தளங்களில் 'சக்ரா' படம் ஓ.டி.டி. பிளாட்ஃபார்மில் வெளியாகப்போகிறது என்று செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது படக்குழு. 'சக்ரா' படம் திரையரங்கில்தான் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் சங்க தேர்தலின் வாக்குகளை எண்ணலாமா? அல்லது மறுதேர்தல் நடத்தலாமா? -பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

highcourt chennai


நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் வாக்குகள் எண்ணப்படாத நிலையில் இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மறு தேர்தல் நடத்தலாமா? அல்லது வாக்கை எண்ணலாமா? என்பதை வழக்கின் மனுதாரர்களின் இருதரப்பும் பேசி முடிவெடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

இந்த வழக்கில் கடந்த ஆண்டு தேர்தலுக்கு 30 லட்சம் செலவானது. எனவே மறுதேர்தல் சாத்தியமற்றது எனக் கூறிய விஷால் தரப்பு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என வாதிட்டது. தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதால் நியாயமாக மறு தேர்தல் நடத்த தயார் என ஏழுமலை தரப்பு வாதம் செய்தது.

 

இந்நிலையில் நடிகர் சங்கதிற்கு மறு தேர்தல் நடத்துவதா? அல்லது நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதா? என நடிகர் விஷால் தரப்பும், ஏழுமலை தரப்பும் செப்டம்பர் 24 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

 

 

Next Story

விஷால் நிறுவன கணக்காளர் ரம்யாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

Published on 12/08/2020 | Edited on 12/08/2020

 

chennai high court

 

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன கணக்காளரின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

நடிகர் விஷால், தன்னுடைய தந்தையைத் தொடர்ந்து, சில படங்களைத் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் இயங்கும் இந்த நிறுவனம், சென்னை, வடபழனி, குமரன் காலனியில் உள்ளது. இதில், சாலிகிராமத்தைச் சேர்ந்த ரம்யா என்பவர், பெண் கணக்காளராக கடந்த 5 வருடங்களாகப் பணியாற்றி வந்திருக்கிறார். 

 

இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதலே விஷால் பிலிம் பேக்டரி, வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய டி.டி.எஸ். தொகையில் இருந்து  பணம் காணாமல் போவதாகக் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், இது குறித்து சோதனை செய்ததில், கணக்காளர் ரம்யா அரசுக்கு கட்ட வேண்டிய டி.டி.எஸ். தொகையை, தன்னுடைய கணவரின் வங்கிக் கணக்கிற்கும், குடும்ப உறுப்பினர் ஒருவருவரின் வங்கிக் கணக்கிற்கும் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரி கிருஷ்ணன், இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மோசடி செய்த ரம்யாவை கைது செய்ய வேண்டும் என்றும், மோசடி செய்த 45 லட்ச ரூபாயைப் பெற்றுத் தர வேண்டும் என்றும்  கூறப்பட்டது.

 

Ad

 

இதனடிப்படையில்,  கணக்காளர் ரம்யா மீது, மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரம்யா முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, ரம்யாவின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.