சீதா என்னும் தெலுங்கு படத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக நடித்த பின்னர் நடிகை காஜல் அகர்வால் ஜெயம் ரவியின் கோமாளி பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார். ஜெயம் ரவி ஒன்பது வேடங்களில் நடிக்கும் அவரின் 24 படத்தில் காஜல்தான் ஹீரோயின். தெலுங்கு தமிழ் சினிமாத்துறையில் தற்போது உட்ச நட்சத்திரம் என்கிற அந்தஸ்துடன் வலம் வரந்துகொண்டிருக்கிறார்.

Advertisment

narendra modi

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ளும்படி அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அழைப்பு கடிதம் காஜலுக்கு லேட்டாக வந்ததால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் ட்விட்டரில் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ராஜ்பவனில் நடைபெற்ற இந்த விழாவில் உலகம் முவதிலும் இருந்து சுமார் 8000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த், பல பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.