இந்நிலையில் மீதமிருந்த நான்கு குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர்கள் தாக்கல் செய்த மனுக்களால் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் தேதி மூன்று முறை மாற்றிவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து இந்திய பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சிலரின் கருத்து...
கார்த்தி: 8 வருடங்கள் கழித்து ஒரு வழியாக நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது. பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என யோசிக்கிறேன். ஏற்கெனவே ஒரு வருடம் முடிந்துவிட்டது. அதிலிருந்து நாம் கற்ற பாடங்களை மறக்க மாட்டோம் என நம்புகிறேன். எப்போதும் பாதுகாப்பாக இருங்கள்.
அருண் விஜய்: இந்த நாள் நல்ல செய்தியுடன் விடிந்துள்ளது. ஆனால் இதற்காக 7 வருடக் காத்திருப்பு என்பது துரதிர்ஷ்டவசமானது. பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்காக வாதாட வேண்டாம் என வழக்கறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நம் அனைவருக்கும் அம்மா, சகோதரி, மகள் இருக்கின்றனர். இந்த உலகைக் காப்பாற்ற ஆண்களை நன்றாக வளர்க்க வேண்டும்.
வரலட்சுமி: நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டார். ஒரு போராளியாக இறந்தார். இந்த (குற்றத்தைச் செய்த) மிருகங்களைத் தூக்கில் போட நமது நீதித்துறைக்கு 7 வருடம் ஆகியிருக்கிறது. ஆனால் நிர்பயாவின் வாழ்வை நாசமாக்க குற்றவாளிகள் 7 நிமிடங்கள் கூட யோசிக்கவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டை என்பது இப்போதாவது தரப்பட வேண்டும்.
டாப்ஸி: ஒரு வழியாக நடந்துவிட்டது. பல வருடங்கள் கழித்து இன்றிரவாவது அந்த பெற்றோரால் சற்று ஒழுங்காக உறங்க முடியும் என்று நம்புகிறேன். இது அவர்களுக்கு நீண்ட நெடும் போராட்டமாக இருந்திருக்கிறது.
பார்த்திபன்: உலக மகிழ்ச்சி தினமின்று! 30 நிமிடங்கள் கழித்து உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவிப்பு. ஆனால் 7 நீண்ட வருடங்கள் கழித்தே மட்டமான சில உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன!
பிரசன்னா: ஒரு வழியாக நிர்பயாவின் ஆன்மா சாந்தியடையும். இதிலிருந்து (மற்ற குற்றவாளிகள்) பாடம் கற்கட்டும். நமது பெண்கள் அமைதியுடன், மரியாதையுடன், கண்ணியத்துடன் வாழட்டும்.