Skip to main content

“உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்” - லோகேஷ் கனகராஜுக்கு எதிராக மனு

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
case against lokesh kanagaraj and leo

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தை இயக்க கமிட்டானார். அதற்கான கதை எழுதும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரலில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதுரையை சேர்ந்த ராஜமுருகன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “லியோ படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதோடு ஆயுத கலாச்சாரம் காட்டப்பட்டுள்ளது. மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி, முரண்பாடான கருத்துகளை முன்வைக்கிறது. அதன் தொடர்பான எதிரிகளை பழிவாங்குவதற்கு பெண்கள், குழந்தைகளை கொல்ல வேண்டும் என இளம் சிறார்களை பாதிக்கக்கூடிய காட்சிகளை லோகேஷ் கனகராஜ் படமாக்கியுள்ளார். 

மேலும் சட்ட விரோத செயல்கள், போதைப் பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், அதிகாரத்தை அச்சுறுத்துவது, காவல் துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என சமூக விரோதமான கருத்துக்களை தனது திரைப்படங்காலில் காண்பித்திருக்கிறார். இது தொடர்பாக லியோ படக்குழு மீது வழக்கு பதிவு செய்து, லியோ படத்தை எந்த தளத்திலும் திரையிடாதவாறு தடை விதிக்க வேண்டும். வன்முறை காட்சிகளை படமாக்கி அதை திரைப்படமாக்கியதால், அவருக்கு முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. அதனால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.     

சார்ந்த செய்திகள்

Next Story

அளவான வசனம் - கவனம் பெறும் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ட்ரைலர் 

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
arjun das santhakumar rasavathi trailer released by lokesh kanagaraj

மௌனகுரு, மகாமுனி படங்களை தொடர்ந்து சாந்தகுமார் இயக்கியுள்ள அடுத்த படம் ரசவாதி. இப்படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடிக்க ஹீரோயினாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், சுஜித் சங்கர், ஜி.எம்.சுந்தர், சுஜாதா, ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் சாந்தகுமாரே இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தமன் இசையமைத்துள்ளார். 
இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரியில் வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ், அனிருத், கார்த்தி, கார்த்திக் சுப்பராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

 

arjun das santhakumar rasavathi trailer released by lokesh kanagaraj

ட்ரைலரில், சாந்தகுமாரின் முந்தைய படங்களை போலவே வசனங்கள் அளவாகவும் அழுத்தமாகவும் இடம்பெறுகிறது. ட்ரைலரில்ன் ஆரம்பத்தில், “என்ன பெரியவரே, எத்தனை தலைமைறையா இங்க நின்னு எங்களையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டி இருக்கீங்க” என்ற வசனத்துடன் தொடங்கி, பின்பு வசனங்கள் எதும் இடம்பெறாமல் ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் காதல் காட்சிகள் நிறைந்து இறுதியில், “பயமில்லாம நடிக்கிறது தான் வீரம்னு உங்க வீட்ல சொல்லிக் கொடுத்துருக்காங்களா, என் வீட்ல சண்டையில சாவுறதுதான் வீரம்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க” என அர்ஜுன் தாஸ் பேசும் வசனத்துடன் முடிகிறது. இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மே 10ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.   

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.