2.0 ஏற்படுத்திய ரூ.20 கோடி கடன்... தர்பாருக்கு தடை கோரி வழக்கு...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து, வருகிற ஜனவரி 9ஆம் தேதி உலகம் மூழுவதும் வெளியாக இருக்கும் படம் தர்பார். அமெரிக்காவில் 8ஆம் தேதியே ரிலீஸாக இருக்கிறது.

rajnikanth

ரஜினியை வைத்து 2.0 படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்த லைகா நிறுவனம்தான் தர்பார் படத்தையும் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு தடை கோரி மலேசியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.

2.0 தயாரிப்பதற்காக மலேசியாவைச் சேர்ந்த நிறுவனமான டிஎம்ஒய் கிரியேஷன் நிறுவனத்திடம் பெற்ற ரூ.20 கோடி கடனை திருப்பி அளிக்கும் வரை படத்தை வெளியிட கூடாது என்று அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிறுவனம் தொடர்ந்த வழக்கிற்கு ஜனவரி 2க்குள் லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

darbar rajnikanth
இதையும் படியுங்கள்
Subscribe