ADVERTISEMENT
தனுஷ் ரசிகர்கள் காலை முதலே சென்னை மற்றும் புதுச்சேரியில் பல திரையரங்குகளில் பேனர் வைத்து, அதற்கு பால் அபிஷேகம் செய்து, பின்பு வெடி வெடித்து கொண்டாடினர். சென்னையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு வந்து தனுஷின் இரு மகன்களும் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர். இதனிடையே கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்க்க வந்த பார்வையாளர்களுக்கு, முழு கரும்பு வழங்கி கொண்டாடினர் தனுஷ் ரசிகர்கள்.
ADVERTISEMENT
இதே போல் புதுச்சேரியில் உள்ள திரையரங்கில் தனுஷ் ரசிகர்கள், பேனருக்கு பால் அபிஷேகம் செய்ததுடன், 108 தேங்காய் உடைத்து கொண்டாடினர். மேலும் சாலையில் சென்ற பொது மக்களுக்கு கரும்பு வழங்கினர். இது அப்பகுதியில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
Show comments