Businessman complains against Shah Rukh Khans wife Gauri Khan for property issue

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கான். இவர் சினிமா தயாரிப்பாளராகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் வீடுகளுக்கு இன்டீரியர் டிசைனிங்கும் செய்து வருகிறார். ரன்பீர் கபூர்,கத்ரீனா கைஃப், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்ட சில பாலிவுட் பிரபலங்களுக்கு அவரது வீடுகளில் இன்டீரியர் டிசைனிங் செய்துள்ளார். மும்பையில் பாந்த்ரா பகுதியில் 'மன்னாத்' என அழைக்கப்படும் அவர்களது வீட்டின்உள்பகுதியையும் கௌரி கான் தான் டிசைன் செய்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் கௌரி கான் மீது மும்பையை சேர்ந்த ஜஸ்வந்த் ஷா என்ற தொழிலதிபர் நம்பிக்கை மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் "கௌரி கான் விளம்பர தூதராக இருந்த அடுக்குமாடி கட்டிடம் விற்பனை செய்யும் நிறுவனத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு ரூ. 86 லட்சம் பணம் செலுத்தி அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கினேன். லக்னோவின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் உள்ள துளசியானி கோல்ஃப் வியூவில் அந்த இடம் அமைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கு பின் தன்னிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில் தற்போது வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இந்தப் புகாரின் பேரில் கௌரி கான் மீதும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள்இரண்டு பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இது பாலிவுட் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.