Skip to main content

ஆண் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை தோலுரித்துக் காட்டும் படம்!

Published on 20/07/2018 | Edited on 21/07/2018
botha

 

 

 

ஆண் பாலியல் தொழிலாளி பற்றிய கதையில் உருவான 'போத' படத்தின் மூலம் கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளா ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி இப்பட அனுபவம் குறித்து பேசியபோது.... "சின்ன வயது முதலே எனக்கு  சினிமாவில் நடிக்க ஆசை இருந்தும் கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.டெக் ஐ.டி படிக்கும் போது சினிமாவில் நடிக்க அதீத ஆசை ஏற்பட்டது. காரணம் என் தந்தை ராஜசேகர். பல வருடங்களுக்கு முன் 'எத்தனை மனிதர்கள்' உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலை காட்டிய என்  தந்தை குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயிக்க முடியவில்லை. அதனால் எனது சின்ன வயதிலேயே அவரது நிராசை எனது ஆசை மற்றும் லட்சியமானது. சென்னைக்கு காலேஜ் ப்ராஜக்ட் ஒர்க்கிற்காக வந்த நான் பெசன்ட் நகரில் உள்ள 'ஆக்டர்ஸ் ஸ்டுடியோ' எனும் பிரைவேட் ஆக்டிங் ஸ்கூலில்  நடிப்புக் கற்றபடி நடிக்க வாய்ப்பு தேடினேன்.

 

 

வடகறி, அச்சமில்லை அச்சமில்லை, நிலா உள்ளிட்ட திரைப்படங்களில் சின்னதும், பெரிதுமான கதாபாத்திரங்களில் நடித்தபடி நான் நடிப்பு கற்றுக் கொண்டேன். பின்னர் பெசன்ட் நகர் 'ஆக்டர்ஸ்  ஸ்டுடியோ' ஆக்டிங் ஸ்கூலிலேயே மற்றவர்களுக்கு நடிப்பு  கற்றுத் தந்தபடி கோடம்பாக்கத்தையே வலம் வந்துகொண்டிருந்த சமயம் நண்பர்  கணேஷ்  மூலம் சுரேஷ் ஜி இயக்கத்தில்  "போத" பட வாய்ப்பு வந்தது. இதில் நான் ஆண் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடித்துள்ளேன்.ஆனால் இந்த வேடம்  ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே வரும். மற்றபடி மொத்த திரைக்கதையிலும் சரி, தப்பு எது என்று தெரியாமல், பொய், திருட்டு என பணத்தை துரத்துவது தான் என் கதாபாத்திரம். மேலும் படத்தில் கதாநாயகி இல்லை என்றாலும் காமெடியாக கதை சொல்லப்பட்டிருப்பதால் குடும்பத்துடன் சென்று இப்படத்தை பார்க்கலாம்" என கேரண்டி கொடுத்துள்ளார் விக்கி.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ரஜினி,கமல் ஜீரோ;சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார்- சீமான்!!

Published on 06/01/2019 | Edited on 06/01/2019

சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த  இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

SEEMAN

 

உண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.

 

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே என் தம்பி சிலம்பரசன்தான். மூன்று படம் சிம்புவை வைத்து எடுக்கப்போவதாக முடிவு செய்தாச்சு. அதோட பலபேர் நெஞ்சு வெடிக்க போகுது.  தனக்கு நேர்மையானவன், துணிவானவன், அச்சப்படாதவன் அவன்தான் ரியல் சூப்பர் ஸ்டார். கொளுத்தி எடுக்குறோம் அண்ணனும் தம்பியும் சேர்ந்து.

 

எல்லார்கிட்டையும் கதையை சொன்னேன் எல்லாரும் பயந்துட்டாங்க ஆனா நான் நடிக்கிறேன் அண்ணா என்று என் தம்பி சிம்பு மட்டும்தான் சொன்னார். ஏன் சொன்னார் அவர்தான் தமிழன்.  அண்ணாவுக்கு எம்ஜிஆர் அண்ணனுக்கு நீதான்'னு சொல்லிட்டேன்.

என்றார் நகைச்சுவையாக.