Skip to main content

"பெரிய ஹீரோக்களே இப்படித்தான்" - கால்ஷீட் பிரச்சனை குறித்து வருத்தப்பட்ட போனி கபூர்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

Boney Kapoor slams big actors for completing films in 25-30 days

 

இந்தியில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'வலிமை', 'நெஞ்சுக்கு நீதி' மற்றும் 'வீட்ல விசேஷம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார். 

 

இப்போது மீண்டும் அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்து 'துணிவு' படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தை எச்.வினோத் இயக்க கதாநாயகியாக  மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் போனி கபூர் தயாரிப்பில் அவரது மகள் ஜான்வி கபூர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான  படம் ‘மிலி’. இப்படம் மலையாளப் படமான 'ஹெலன்' படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இந்தப் பட ப்ரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சியில் போனி கபூர் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் அந்த நிகழ்ச்சியில், "பெரிய ஹீரோக்கள் சிலர் 25 - 30 நாட்களுக்கு தங்களது கால்ஷீட்டை ஒதுக்கிவிட்டு முழுச் சம்பளத்தையும் கேட்கிறார்கள். தொடக்கத்திலிருந்தே அவர்கள் செயல்பாடுகள் சரியில்லை. நான் எந்த நடிகரையும் இங்குக் குறிப்பிடவில்லை. ஆனால் சிலர் இப்படித்தான் செய்கிறார்கள். 

 

அவர்கள், தங்களது வசதியைத்தான் முதலில் பார்க்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஒரு நடிகர், இயக்குநருடனும் தயாரிப்பாளருடனும் ஒத்துப் போகவில்லை என்றால் அந்தப் படம் தோல்விதான் அடையும். இதனைப் பல ஹீரோக்கள் படங்களில் நான் பார்த்திருக்கிறேன்" எனப் பேசியுள்ளார்.  

 

போனி கபூர் எந்த நடிகரையும் குறிப்பிடவில்லை என்றாலும் இதைக் கேட்ட இணையவாசிகள் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரைத்தான் போனி கூறுகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். அக்ஷய் குமார்தான் குறைந்த தேதியில் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து தொடர்ச்சியாகப் படங்களை வெளியிடுவார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.