Skip to main content

பூசணிக்காய் உடைத்த எஸ்.ஜே சூர்யா படக்குழு!

Published on 19/02/2020 | Edited on 19/02/2020
fge

 

 

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் “பொம்மை” படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்த நேரத்தில் வேகமாக நிறைவு பெற்றுள்ள நிலையில் “பொம்மை” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துவங்கியுள்ளது. ஏஞ்சல் ஸ்டுடியோஸ் MH LLP வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன் Dr.ஜாஸ்மின் சந்தோஷ் Dr.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"என் பிறந்தநாளுக்கு ட்ரைலர் வராது!" - எஸ்.ஜே. சூர்யா அறிவிப்பு!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

gdsbsdbs

 

இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பொம்மை’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஏஞ்சல் ஸ்டுடியோஸ் MH LLP வழங்கும் இப்படத்தை வி. மருது பாண்டியன், Dr. ஜாஸ்மின் சந்தோஷ், Dr. தீபா டி. துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். 

 

இப்படத்தின் இசை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ட்ரைலர் எஸ்.ஜே. சூர்யா பிறந்தநாளான ஜூலை 20ஆம் தேதி அன்று வெளியாகும் என இப்பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் 'பொம்மை' பட ட்ரைலர் ரிலீஸ் குறித்து எஸ்.ஜே. சூர்யா ட்வீட் செய்துள்ளார். அதில்.. "திரையரங்கு வெளியீட்டு அனுமதியை அரசு ஒத்திவைத்துள்ளது. எனவே அதன்படி 'பொம்மை' பட ட்ரைலர் வெளியீட்டில் இன்னும் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளது. மன்னிக்கவும் நண்பர்களே. நடப்பவை எல்லாம் நன்மைக்கே என எண்ணுவோம். வரும்போது சாலிடாக வருவோம்" என பதிவிட்டு ட்ரைலர் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக அறிவித்துள்ளார்.

 

 

Next Story

நடிகை பிரியா பவானியுடன் காதலா? - கடுப்பான எஸ்.ஜே. சூர்யா...!

Published on 16/01/2020 | Edited on 16/01/2020

தமிழ் சினிமாவில் வாலி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து, தன்னுடைய இயத்திற்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக நியூ, அன்பே ஆருயிரே, இசை, வியாபாரி, திருமகன் உள்ளிட படங்களில் அவர் நடித்திருந்தாலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியத்தில் வெளியான 'இறைவி' படத்தில், அவர் நடிப்பு புதிய பரிணாமத்தைக் கண்டது. அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில், "ஆண் நெடில்... பெண் குடில்" என்ற வசனமும், எஸ்.ஜே.சூர்யாவின் எதார்த்தப் பேச்சும் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. இதற்கிடையில் மெர்சல், ஸ்பைடர் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரம் ஏற்று மிரட்டியிருந்தார். 

 

actor-sj-surya-twitter

 

 



இப்படி தமிழ் திரையுலகில் தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்தப் படம் அனைத்து விதமான ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டதையடுத்து, பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஜோடி மீண்டு இணைந்துள்ளது.
 

இதற்கிடையில் எஸ்.ஜே.சூர்யா ப்ரியாவிடம் தனது காதலை கூறியதாகவும் அதை ப்ரியா நிராகரித்து விட்டதாகவும் சமூகவலைதளங்களில் செய்தி தீயாய் பரவியது. இதைப்பாரத்து கோபமடைந்த  எஸ்.ஜே. சூர்யா, தனது டிவிட்டர் பக்கத்தில், "பிரியா பவானிசங்கரிடம் நான் காதலை வெளிப்படுத்தினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார் என்று சில முட்டாள்கள் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். மான்ஸ்டர் படத்தில் இருந்து அவர், எனக்கு நல்ல நண்பர். நல்ல நடிகையும் கூட. தயவு செய்து தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள். நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.