Skip to main content

பணத்தை வைத்து ஐசிசியை கிண்டலடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்...

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் பெரும் அதிர்ச்சியாகவே அமைந்தது என்று சொல்லலாம். நியூசிலாந்து அடித்த ரன்னை சமன் செய்தது இங்கிலாந்து. இதனையடுத்து ஐசிசியின் விதிப்படி சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதிலும் இங்கிலாந்து அடித்த ரன்னை நியூசி அணி சமன் செய்தது. 
 

kane williamson

 

 

இதனால் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐசிசியின் இந்த விதிமுறை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. பலரும் இதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 

இந்நிலையில் இந்த விதிமுறையை அமிதாப் பச்சன் பணத்தை வைத்து கலாய்த்துள்ளார். “உன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் ஒரே நோட்டாக இருக்கிறது. என்னிடம் ரூ.2 ஆயிரம் நான்கு 500 ரூபாய் நோட்டுகளாக இருக்கிறது. நம்மில் யார் பணக்காரர் என்று கேட்க அதற்கு நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்துள்ளவரே பணக்காரர் என்பார்கள்” என்று ஐசிசி சொல்வது போல் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற கடலூர் வீராங்கனை!  

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

பிரேசிலில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து சாதனை படைத்து இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். கடலூரை பூர்வீகமாக கொண்ட வீராங்கனை இளவேனில் வாலறிவன்.  

brazil rifle, pistol world cup 2019 in  wins gold in cuddalore women

இவர் கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் பகுதியில் பிறந்த இளவேனில் என்ற 19 வயதுடைய கல்லூரி மாணவி தற்போது குஜராத்தில் தாய் தந்தையுடன் மணி நகரில் வசித்து வருகிறார். இவர் துப்பாக்கி சூடும் போட்டியில் பிரேசில் நாட்டில் தங்க பதக்கம் பெற்றதையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய வீராங்கனை இளவேனில் தாத்தா உருத்திராபதியும், பாட்டி கிருஷ்ணவேணியும். "துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த இளவேனில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே தங்கள் ஆசை"  என்று கூறுகின்றனர்


தமிழ்நாட்டுக்கும், கடலூருக்கும் பெருமை சேர்த்த இளவேனில் வாலறிவனை கடலூர் மக்கள் பெருமையோடு வாழ்த்துகின்றனர்.


 

Next Story

சஞ்சய் மஞ்சுரேக்கரை கிழித்தெடுத்த விக்னேஷ் சிவன்...

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுத்திப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 

vignesh shivan

 

 

இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.  இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது.
 

சஞ்சய் மஞ்சுரேக்கர் உலகக்கோப்பை தொடக்கத்திலிருந்தே எதிர்மறையான கருத்துக்களை கூறி சர்ச்சைகளில் சிக்கிவந்தார். அதிலும் குறிப்பாக தோனி மற்றும் ஜடேஜாவை மிகவும் மோசமாக விமர்சித்தார். இது டிவியில் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த எரிச்சலை தந்தது. 
 

இந்நிலையில் நேற்று நடந்த மேட்ச் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன், “நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் சஞ்சய் மஞ்சுரேக்கர். ஆனால் உண்மையில் ஜெயித்தது நீங்கள் அல்ல உங்களுடைய எதிர்மறை சிந்தனை, உங்கள் பிரார்த்தனைகள் கடைசியில் வென்றுவிட்டன. நியூஸிலாந்து அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்போது நீங்கள்தான் கோப்பையை வெல்ல வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் நீங்கள் தோற்கடித்தது உலகின் மிகச் சிறந்த அணியை. உலகக் கோப்பை தொடர்ந்து முழுவதுமே சிறப்பான பொழுதுபோக்கைப் படைத்த இந்திய அணிக்கு நன்றி.
 

தோனி மீண்டும் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என நினைத்தோம். ஆனாலும் பரவாயில்லை தோனி, நீங்கள் எங்களுக்காக நிறைய செய்துவிட்டீர்கள். உங்களை நினைத்து அசைபோட நிறைய நல்ல தருணங்கள் இருக்கின்றனர். அதனால் நேற்றைய ஆட்டத்துக்காக வருந்தாதீர்கள்.உங்களிடம் முன்வைக்க ஒரே ஒரு கோரிக்கை மட்டும் இருக்கிறது. நீங்கள் ஓய்வு பெறவிருப்பதாக வெளியாகும் யூகங்கள் யூகங்களாகவே இருக்கட்டும். 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் உங்களைப் பார்க்க விரும்புகிறோம். விளையாடிக் கொண்டே இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.