Skip to main content

வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் பிரபலங்கள்...

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் கரண் ஜோஹர். இவர் கடந்த சனிக்கிழமை அன்று சில பாலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் வீடியோ ஒன்றை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
 

insta

 

இந்த பார்ட்டியில் தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், ஷாகித் கபூர், விக்கி கவுசல், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபல இந்தி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் நடிகைகள் அனைவரும் போதையில் இருப்பதுபோல இருப்பதாக இந்த வீடியோவை பார்த்தவர்கள் சமூக வலைதளத்தில் விமர்சிக்க தொடங்கினர். ஒருசிலர் அவர்கள் அனைவரும் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களை பயன்படுத்தியுள்ளனர். அதனால்தான் அந்த வீடியோவில் அப்படி இருக்கிறார்கள் என்று சொல்கினறனர்.

பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ மஞ்சிந்தர் சிங் சிர்ஸா வீடியோவை பகிர்ந்து “இதை பாருங்கள் இந்தி நடிகர், நடிகைகள் குடிபோதையில் திளைக்கிறார்கள். அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். இதற்கு எதிராக எனது குரலை பதிவு செய்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மிலிந்த் டியோரா, “எனது மனைவியும், நானும் அந்த விருந்தில் கலந்துகொண்டோம். யாரும் போதை பொருள் பயன்படுத்தவில்லை. எனவே பொய்யான தகவலை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.