bjp complaint against vijay leo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

ரிலீஸாகும்முன்பே சில சர்ச்சையில் படக்குழு சிக்கியுள்ளது . இசை வெளியீட்டு விழா நடத்தத் திட்டமிடப்பட்டு, பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையாகி, அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

Advertisment

இதையடுத்து வெளியான ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் ஒன்று பலரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சென்னையில் ரோகிணி திரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை உடைத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் லியோ படக்குழுவிற்கு எதிராக பாஜக சார்பில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழுவில் உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் பாஜக-வை சார்ந்த ராஜரத்தினம் என்பவர், சில குற்றச்சாட்டுகளைவைத்து இந்தப் புகாரை கொடுத்துள்ளார். அந்த புகாரில், "லியோ படத்தின் டிரைலர் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் டீசர் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தணிக்கை வாரியத்தால் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

திரையரங்கில் நடந்த சில வன்முறைகள் குறித்தும் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. பொது மக்களின் பார்வையில், ட்ரெய்லர் படத்தின் சில வசனங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக பலரும் கூறியுள்ளனர். எனவே லியோ படத்தின் டிரெய்லர் சான்றிதழ் இல்லாமல் தியேட்டர்களில் வெளியானது எப்படி என்பது குறித்து விசாரித்து முழுப் படத்துக்கும் சான்றிதழ் வழங்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.