உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில், தற்போது இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் நேற்று 800க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில் நடிகை பிந்துமாதவி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார் பிந்து மாதவி.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “என்னுடைய குடியிருப்பில் இருக்கும் குடியிருப்பவாசிகளில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கள் கட்டிடத்தில் இருக்கும் அனைவரும் அடுத்த 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள போகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT