Skip to main content

தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நடிகை பிந்து மாதவி!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020
bindu madhavi


உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில், தற்போது இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் நேற்று 800க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் நடிகை பிந்துமாதவி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார் பிந்து மாதவி.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “என்னுடைய குடியிருப்பில் இருக்கும் குடியிருப்பவாசிகளில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கள் கட்டிடத்தில் இருக்கும் அனைவரும் அடுத்த 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள போகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

''சரியான அணுகுமுறை சிம்பு..!'' - சிம்புவை பாராட்டிய பிந்து மாதவி 

Published on 15/05/2020 | Edited on 15/05/2020
ggdeg

 

சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் 'மாநாடு' படத்தின் ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் நடிகர் சிம்பு, விடிவி கணேஷ் மற்றும் தனது குடும்பத்தாருக்காக சமைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் விடிவி கணேஷ், “வருகின்ற மனைவிக்கு எந்த வேலையும் இல்லாமல் நீயே செய்துவிடுவாய் போல” என்று கிண்டலாக கேட்க, அதற்குப் பதிலளித்த சிம்பு, “வரப்போகும் எனது மனைவி என்ன வேலைக்காரியா? அவருக்குப் பிடித்தால் சமைக்கட்டும் இல்லை என்றால் பிடித்த வேலையை பார்க்கட்டும்” என்றார். தற்போது இந்த வீடியோ ட்விட்டர், பேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோ குறித்து நடிகை பிந்து மாதவி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்...''சரியான அணுகுமுறை சிம்பு.. நாங்கள் அனைவரும் அவளை சந்திக்க காத்திருக்கிறோம்... # சிம்பு'' என பதிவிட்டுள்ளார்.