Skip to main content

'எனக்கு ஒருவர் மீது சீக்ரெட் கிரஷ் உள்ளது' - பிக்பாஸ் பிந்து மாதவி  

Published on 07/04/2020 | Edited on 07/04/2020


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் நடிகர்கள் பலரும் பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி வீடியோக்களின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சில நடிகர்கள் வீட்டினில் தங்கள் குழுந்தகைகளுடன் விளையாடுவது,வீட்டைச் சுத்தம் செய்வது,சமையல் செய்வது, ரசிகர்களுடன் சமுகவலைத்தளத்தில் உரையாடுவது எனப் பல்வேறு வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

 

gd

 

இந்நிலையில் நடிகை பிக்பாஸ் பிந்து மாதவி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.அதில் அவர் தன் காதல் அனுபவம் குறித்து பேசியபோது...''ஒருவர் மீது எனக்கு சீக்ரெட் கிரஷ் உள்ளது.அதை நான் யாரிடமும் சொன்னது கிடையாது.உடனே இதற்கு காதல் சாயம் பூசி,நானும் காதலிக்கிறேன் எனச் சொல்லிவிட முடியாது.இது ஒரு ஈர்ப்புதான். அதேபோல் நான் எந்த வித கமிட்மென்ட்டுக்கும் இன்னும் ஆளாகவில்லை.எனவே இப்போதைக்கு சிங்கிளாகவே இருக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

படத்திற்காக விரதம் இருக்கும் பிரபல நடிகை

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

bindu madhavi naga movie update out now

 

தமிழ் சினிமாவில் கழுகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் பிந்துமாதவி. இவர் தற்போது இயக்குநர் அனிஷ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் 'பகைவனுக்கு அருள்வாய்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் நடிகை பிந்து மாதவி அடுத்ததாக சார்லஸ் இயக்கும் நாகா படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்ரீகாந்த், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கே. முருகன் தயாரிக்கும் இப்படத்தில் பிந்து மாதவி அம்மன் பக்தையாக நடிக்கவுள்ளாராம். இதற்காக அவர் சைவ உணவுகளை தவிர்த்துவிட்டு விரதம் இருந்து நாகா படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. 

 

 

Next Story

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிக்பாஸ் நடிகை!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

ghfhfh

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. 

 

இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை, அரசியல் பிரமுகர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், வளர்ந்துவரும் நடிகையும், பிக்பாஸ் புகழ் நடிகையுமான பிந்து மாதவி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.