அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். இந்த படத்தின் ஷூட்டிங் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. விஜய்க்கான காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டு தற்போது டப்பிங் செய்து வருகிறார் என்று படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை குறி வைத்து ரிலீஸ் செய்ய காத்திருக்கிறது படக்குழு.

Advertisment

bigil

இப்படத்தில் சிங்கப்பெண்ணே என்கிற பாடல் படக்குழு வெளியிடுவதற்கு முன்பே சமூக வலைதளத்தில் லீக் ஆனது. இதனால் உடனடியாக அந்த பாடலை படக்குழு வெளியிட்டது. ஏ.ஆர். ரஹ்மான், இசைக்கலைஞர்கள் வைத்து ஒரு ஆல்பம் போல இந்த பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது படக்குழு.

இதனையடுத்து பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள நடிகர் விஜய் முதன் முறையாக ரஹ்மான் இசையில் வெறித்தனம் என்ற ஒரு பாடலை பாட இருக்கிறார் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த பாடல் எப்படி இருக்கும் என்று பலரும் எதிர்ப்பார்த்து வரும் நிலையில், நேற்று ட்விட்டரில் வெறித்தனம் லீக்ட் என்று ஹேஸ்டேக் ட்ரெண்டானது.

Advertisment

விஜய் ரசிகர்கள் பலர் பாடல் ஒன்றும் வெளியாகவில்லை. இதுபோல் ஒரு ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்தாலாவது வெறித்தனம் பாடலை படக்குழு வெளியிடுவார்கள் என்கிற எண்ணத்தில் இவ்வாறு செய்கிறார்கள் என்று பதிவிட்டு வந்தார்கள். இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. ஏற்கனவே ஒரு பாடல் வெளியானதால் கடுப்பில் இருக்கிறது படக்குழு.