Skip to main content

நீ ஃபர்ஸ்ட்டா நான் ஃபர்ஸ்ட்டா... - பிகில் - கைதி தயாரிப்பாளர்கள் ஆடும் கேம்!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

கோலிவுட்டில் வாரா வாரம் படங்கள் ரிலீஸாகிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பண்டிகையில் ரிலீஸாகும் படங்களுக்கு தனி மவுசுதான். அதுவும் தீபாவளி என்றால் கூடுதல் கொண்டாட்டம்தான். இந்த வருட தீபாவளிக்கு விஜய் நடிப்பில் பிகில் படமும் கார்த்தி நடிப்பில் கைதி படமும் ரிலீஸாக இருக்கின்றன.
 

bigil kaithi

 

 

இந்த அறிவிப்பை இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிவித்துவிட்டன இரு நிறுவனங்களும். கடந்த இரண்டு மாதங்களாக வாரா வாரம் ஏதாவது அப்டேட்களை விட்டுக்கொண்டே வருகின்றன இரு தயாரிப்பு நிறுவனங்களும். ஆனால், ரிலீஸ் தேதி என்ன என்று சொல்ல மட்டும் தயக்கம் காட்டி வருகின்றன. பிகில் படம் தொடங்கப்படும்போது ரூ.150 கோடி பட்ஜெட்டில் ஆரம்பித்து தற்போது ரூ.180 கோடியை தாண்டி நிற்கிறதாம். இதனால் பிகில் படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் நிறுவனம், படம் தனியாக ரிலீஸானால்தான் வசூலில் வாரிக்குவித்து, லாபம் பெறும் என்று நம்புகிறதாம். அதனால் அது கைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் அதன் அடிப்படையில் 'கைதி'க்கு முன்பாக ரிலீஸ் பண்ணலாம் என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறது.


ஆனால், ‘கைதி’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இன்னும் ரிலீஸ் தேதி எப்போது என்பதை அறிவிக்காமல் காலம் தாழ்த்தியே வருகிறார். இந்நிலையில் இன்று 'வாலு' படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியின் போட்டோவை நகைச்சுவையாகப் பதிவிட்டு, இன்று மாலை ஐந்து மணிக்கு 'கைதி' படத்தின் அப்டேட் வெளியாகிறது என்று அறிவித்துள்ளார். 'வாலு' படத்தின் புகழ்பெற்ற அந்த காமெடி காட்சியில் சந்தானமும் இன்னொருவரும் 'நான் இங்கயே நிக்கிறேன், நீ யார வேணா கூட்டிட்டு வா' என்று போட்டி போட்டு விடியும் வரை இருவரும் போகாமல் அங்கேயே நிற்பார்கள். அந்த புகைப்படத்தைப் பதிவிட்டதன் மூலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு தாமதமாவதை தானே நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருப்பதாக ரசிகர்கள் ரசிக்கின்றனர். அந்த அப்டேட் ரிலீஸ் தேதியாகத்தான் இருக்கும் என்று ஆவலாகக் காத்திருக்கின்றனர்.


முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'பேட்ட' படமும், சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் 'விஸ்வாச'மும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாயின. அப்போது சன் பிக்சர்ஸ் மற்றும் விஸ்வாசத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் ஆகியவை ட்விட்டரில் போட்டாபோட்டிக்கு பதிவிட்டு வந்தார்கள். இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடனும், சோசியல் மீடியா சண்டைகளுடன் படங்களின் ரிலீஸுக்காக வெயிட் செய்துகொண்டு இருந்தனர். அதே யுக்திதானா இது?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கைதியைக் கொன்ற அஜய் தேவ்கன் - வருத்தத்தில் ரசிகர்கள்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

ajay devgan bhola teaser trolled by kaithi movie fans

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் 'கைதி'. ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை, சஸ்பென்ஸ் கலந்து த்ரில்லிங்குடன் சொல்லியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீசானது.

 

இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை நடிகர் அஜய் தேவ்கன் வாங்கியிருந்தார். 'போலா' என்ற தலைப்பில் இப்படத்தில் நடித்து அதனை இயக்கியும் உள்ளார். பொதுவாக, இந்தி ரீமேக்கில் அவர்களுக்கு ஏற்றாற்போல் கதையில் மாற்றம் செய்து உருவாக்குவார்கள். அந்த மாற்றம் பல படங்களுக்கு ஒர்க்அவுட் ஆவதில்லை என்பது தான் பலரின் வருத்தம். இதற்கு உதாரணமாக 'போக்கிரி', 'காஞ்சனா', 'ராட்சசன்' என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இப்போது புதிதாக இணைந்துள்ளது கைதி படத்தின் இந்தி ரீமேக்கான 'போலா'. 

 

'போலா' படம் அடுத்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் தான் தற்போது இணையவாசிகளின் ட்ரோல் மெட்டீரியல். 'கைதி' படத்தைப் பார்த்து ஃபயர் விட்ட ரசிகர்கள் எல்லாம் 'போலா' பட டீசரை பார்த்து, 'என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...', 'படத்தை கொலை செய்து விட்டார் அஜய் தேவ்கன்' என கமெண்ட்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர். மேலும், கைதி பட ரசிகர்கள் 'இது கைதி படம் தானா...இல்ல வேறொரு படமா' என வருத்தத்தில் உள்ளனர். 

 

 


 

Next Story

ஹீரோயினே இல்லாத படத்தில் அமலா பால்; லோகேஷ் படத்துக்கு வந்த சோதனை

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

amala paul to joined in lokesh kaithi movie hindi remake bhola

 

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் அமலா பால் கடைசியாக 'கடாவர்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து 'அமலா பால் புரொடக்ஷன்' என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்தும் இருந்தார். இப்படம் அமலா பாலின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மலையாளத்தில் 'டீச்சர்', 'கிறிஸ்டோபர்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.

 

ad

 

இந்நிலையில் அமலா பால் தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'கைதி'. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படத்தை 'போலா' என்ற தலைப்பில் அஜய் தேவ்கன் நடித்து அதை இயக்கியும் வருகிறார். இப்படத்தில் நடிகை தபு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது அமலா பால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 

'கைதி' படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகியிருந்தது. அதே சமயம் இந்த படத்தில் கதாநாயகியும் பாட்டும் இல்லாமல் காட்சிகள் அமைந்திருக்கும். இப்படத்தில் அமலா பால் நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் ஹீரோயினே இல்லாத இந்த படத்தில் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்து வருகிறது.

 

ஏற்கனவே தமிழில் இருந்து இந்தியில் ரீமேக்கான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'காஞ்சனா', 'ராட்சசன்' உள்ளிட்ட பல படங்கள் தோல்வியடைந்து ரசிகர்களை சோதித்திருந்தது. அந்த வரிசையில் இப்போது லோகேஷ் படமும் வந்துவிடுமோ என்ற கவலையில் உள்ளனர் லோகேஷின் ரசிகர்கள். இதனிடையே லோகேஷின் முதல் படமான 'மாநகரம்' படமும் இந்தியில் 'மும்பைகார்' என்ற தலைப்பில் ரீமேக் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.