பிகில் படத்தின் மீதான தடை நீக்கமா..?

விஜய் - அட்லீ கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'பிகில்' படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதற்கிடையே உதவி இயக்குனர் கே.பி.செல்வா, தன்னுடைய கதையை திருடிதான் பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

bigil

இந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் கே.பி.செல்வா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் சினிமாஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பணத்திற்காக வழக்கை தொடரவில்லை என கே.பி.செல்வா தரப்பு மறுப்பு தெரிவித்தது. பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு அறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

bigil
இதையும் படியுங்கள்
Subscribe