விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறும் நிலையில் இன்று 4:30 மணிக்கு உனக்காக என்றொரு மெலடி பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

bigil vijay

Advertisment

அட்லியின் இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் விஜய் மற்றும் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்து வருகின்றனர். ஏற்கனவே இத்திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பேராதரவை பெற்றள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலை வெளியிடுகிறது படக்குழு.

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாலை மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. மேலும், இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துக் கொண்டு இசைக்கச்சேரி நடத்த இருப்பதாகவும். வெறித்தனம் பாடலை விஜய் மேடையில் பாட இருக்கிறார் என்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

alt="super duper" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="18497e85-7804-41a9-9097-3f1dae7625eb" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/super%20duper_12.png" />

Advertisment

இந்த வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு பெற்றவர்கள் அனைவரும் சமூக வலைதளத்தில் அழைப்பிதழை பதிவிட்டு வருகின்றனர். இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுவதை ரசிக்கவே ஒரு கூட்டம் இருக்கின்ற நிலையில் பல வருடங்கள் கழித்து விஜய் மேடையில் பாடுகிறார் என்றதும் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.