Skip to main content

கரோனாவால் நிறுத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 8,953  பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரஸால் 2.19 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 166 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 15 பேருக்கு குணமாகிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

biggboss

 

 

இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 25 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இரண்டாவது இடத்தில் இருப்பது கேரளா. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கேரள அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். இது ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் எண்டெமால் ஷைன் என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. தற்போது மோகன் லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி கரோனாவால் ஒளிபரப்பை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “அரசாங்கம் வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குச் செவி சாய்க்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோகன்லாலுடன் இணையும் கமல்ஹாசன்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

kamal hassan to join in mohanlal movie

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

'இந்தியன் 2' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமும், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.  இதனிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கமலிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

 

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் 13 ஆண்டுகள் கழித்து கமலும் மோகன்லாலும் இணைந்து நடிக்கவுள்ளனர். முன்னதாக 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

தடை நீக்கம்; மோகன்லால் படத்திற்கு புதிய நிபந்தனை

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

Ban on Mohanlal's Monster lifted in Bahrain

 

மோகன்லால் நடிப்பில் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மான்ஸ்டர்'. ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இப்படத்தில் லக்‌ஷ்மி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உதய்கிருஷ்ணா எழுத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 21ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

 

இப்படத்தில் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த காட்சிகள் இருப்பதாகக் கூறி வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. இது படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும் என்பதால், தேவையான மாற்றங்களை செய்து படத்தை தணிக்கை குழுவிடம் மீண்டும் சமர்ப்பிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. 

 

இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் இப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழு படத்தை மறுமதிப்பீடு செய்ய தணிக்கை குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தில் உள்ள 13 நிமிட காட்சிகளை ட்ரிம் செய்யுமாறு தயாரிப்பாளர்களிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி படத்திற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் மோகன்லால் நடித்த 'மான்ஸ்டர்' படம் பஹ்ரைன் நாட்டில் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். மேலும் படத்திற்கு தடை விதித்த மற்ற வளைகுடா நாடுகளிலும் மறுமதிப்பீடு செய்யும் முயற்சியை படக்குழு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.