Skip to main content

பிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் பிக்பாஸ் மீரா...

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

இந்த வருடத்திற்காக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பத்து வாரங்களை தாண்டிவிட்டது.  பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, மதுமிதா ஆகியோரைத் தொடர்ந்து அபிராமி 9-வது போட்டியாளராக வெளியேறினார். இந்த வருடம் பல சர்ச்சைகளை உள்ளடக்கி சென்றுகொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரீயாக கஸ்தூரியும், மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவும் மீண்டும் நுழைந்திருக்கின்றனர்.
 

meera mithun

 

 

எவிக்‌ஷனிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் தற்போது எந்த படத்தில் நடிக்கிறார் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். அவர் அருண் விஜய் நடிக்கும் அக்னி சிறகுகள் படத்தில்தான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். பிக்பாஸிலிருந்து வெளியேறியவுடன் தான் நடிக்கப்போகும் முதல் படம் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
 

மீரா மிதுன் முன்னதாக 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

இது தான் பிக்பாஸின் புது ஹவுஸா! (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

 

 

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது புதுசாக அறிமுகப்படுத்தும் பிக் பாஸ், இந்த முறை இரண்டு வீடுகளாக அமைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அந்த வீட்டின் பிரத்தியேக புகைப்படங்கள்...