Skip to main content

பிக்பாஸில் பாலியல் தொல்லை...

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

தமிழ் பிக்பாஸ் தற்போது மூன்றாவது சீஸன் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விட இந்த பிக்பாஸ் கொஞ்சம் விறுவிறுப்பாக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இந்த சீஸனையும் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் பல மொழிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு நல்ல தொகையை சம்பலமாக வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
 

bigboss

 

 

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸை பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு பிக்பாஸிற்கான போட்டியாளர்களை தற்போதுதான் தேர்வு செய்து வருகிறார்கள். எப்போது அந்த நிகழ்ச்சி தொடர்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
 

இச்சமயத்தில் தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொள்ள படுக்கைக்கு அழைப்பதாக டிவி தொகுப்பாளர் ஸ்வேதா ரெட்டி புகாரளித்துள்ளது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. “எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு தேடி வந்தது. அதை நானும் ஏற்றுக்கொண்டேன். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனக்கு போன் செய்து உங்களை போட்டியாளராக தேர்வு செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டார். அவர் என்ன அர்த்தத்தில் பேசினார் என்பது புரிந்தது. இதனால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்கள்...”- சர்ச்சையாகும் மீராமிதுனின் வீடியோ

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர் மீராமிதுன். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 

meera mithun

 

 

அதில் , “ஏன் 'வீ ஆர் தி பாஸ்' என்ற நிகழ்ச்சியை பண்ணினார்கள் எனத் தெரியவில்லை. பிபி ஹவுஸில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே இருந்தோம். ஆண்களை வைத்துத் தான் இந்த ஷோவே நடந்தது போல் காட்டியுள்ளார்கள். மும்பையில் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஆனால், ட்விட்டர் பக்கத்தில் அந்நிகழ்ச்சியில் என்னைக் கிண்டல் செய்ததாகக் என்னுடைய ரசிகர்களும், நண்பர்களும் கூறினார்கள்.

தமிழ்நாட்டில் சிலர் என்னை இழிவாகப் பேசித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த 4 ஆண்களும் இணைந்திருப்பது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அந்த நால்வருமே என் பின்னால் தான் வீட்டிற்குள் சுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே தில் கிடையாது. வீட்டிற்குள்ளேயே என்னை அப்படிப் பார்ப்பார்கள். அவர்கள் கோழைகள். என்னிடம் பேசுவதற்குக் கூட மற்ற பெண்களுக்குத் தெரியாமல் பயந்து பயந்து பேசுவார்கள். என்னுடன் ஒரு நாள் பேசுவார்கள், அதற்குமேல் பேசினால் அவர்களுக்கு பெண்களின் ஓட்டு கிடைக்காது என்பதால் இப்படி செய்வார்கள். ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்களுக்கு பொறாமை வரும் அப்படி இருந்தார்கள். அந்த வீட்டிற்குள் நடைப்பதை நன்கு கவனித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

உங்கள் யாருக்குமே என்னைப் பற்றிப் பேசவில்லை என்றால் புகழே கிடையாது. நான் தான் மிகவும் புகழ் வாய்ந்தவள். அந்த 4 ஆண்களுக்குமே எனது புகழைப் பற்றித் தெரியும். ஆகையால் தான் நால்வரும் எனக்காக அடித்துக் கொண்டார்கள். 

சமூக வலைதளத்தில் என்னை திருநங்கை என்று கிண்டல் செய்வது, பீர் அடிக்கிறேன்,என்னை கருப்பு என்று கேலி பேசுவது எல்லாம் எந்த கூட்டம் செய்கிறது என்பது எனக்கு தெரியும். நீங்கள் அதையே தொடர்ந்து செய்யுங்கள். தமிழ்நாட்டில் எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். இனி நான் தினசரி ஒரு வீடியோ போட்டு அடிச்சிட்டே இருப்பேன். எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்றா கேள்வி எழுப்புகிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற ஹீரோ, ஹீரோயின்களைவிட எனக்கு நேஷனல் மற்றும் இண்டர்நேஷனல் லெவலுக்கு புகழ் இருக்கிறது. இதை நான் எங்குவேண்டுமானாலும் எழுதி தருகிறேன். அவங்களெல்லாம் தமிழ்நாடு தாண்டினா யாருக்குமே தெரியாது. அவங்க என்ன மிஞ்சிபோனா படம்தான நடிக்கிறாங்க, ஆனால் எனக்கு நேஷனல், இண்டர்நேஷனல் லெவல் புகழ் இருக்கிறது. என்னுடைய பெருமையை நானே பீற்றிக்கொள்ளக்கூடாது என இருந்தேன். இந்த ஆறு வருடம் நான் பாசிடிவ் பப்ளிசிட்டியில் இருந்தேன். அதை உடைக்க வேண்டும் என்றே சிலர் என்னுடைய பெயரை முழுதாக டேமேஜ் செய்திருக்கிறார்கள். எல்லாத்துக்கும் அடி கொடுத்துட்டே இருப்பேன்” என்று கூறியுள்ளார். 

 

 

Next Story

சாண்டியை தூக்கிவைத்து கொஞ்சிய சிம்பு... வைரலாகும் வீடியோ

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நூறு நாட்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்துவிட்டது. மலேசியாவை சேர்ந்த தமிழரான முகின் இந்த மூன்றாம் சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களிடம் பிரபலமடைந்த சாண்டி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
 

simbu


இந்த மூன்றாம் சீசன் பிக்பாஸ் போட்டி தொடங்கியதில் இருந்து மக்களிடம் பேராதர்வை பெற்று வந்தவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. அவரும் கவினும் சேர்ந்து பாடு பாடல்கள் எல்லாம் வெளியே செம வைரலானது. அவர் பிக்பாஸை குருநாதா என்று கூப்பிடுவது வைரலாகி, டீசர்ட்டாக சேல் ஆனது. சாண்டியின் புகழால் அவருடைய மகளுக்கு வெளியே லாலா ஆர்மி கூட உருவாக்கப்பட்டது. அந்தளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
 

ff


சாண்டி மாஸ்டர் சிம்புவின் நெருங்கிய நண்பர். சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக தனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவரும் சிம்புதான் என்று சிம்பு போலவே பேசி அசத்தினார். இந்நிலையில் சிம்புவை நேரில் சந்தித்துள்ளார் சாண்டி மாஸ்டார். அப்போது தன்னுடன் சக போட்டியாளராக பங்குபெற்ற தர்ஷனையும் உடன் அழைத்து சென்றிருந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் தன்னை பார்க்க வந்த இருவருக்கும் ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
 

dfgzsgd


இதுவரை சிம்புவின் நெருங்கிய நண்பர்களான ஹரிஷ் கல்யாண், மகத் உள்ளிட்டவர்கள் கடந்த இரண்டு பிக்பாஸில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.