Skip to main content

மொழி அவமதிப்பு செய்த போட்டியாளர்... பிக்பாஸில் வெடித்தது அடுத்த சர்ச்சை!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

biggboss

 

 

தமிழில் பிக்பாஸ் நான்காவது சீஸன் தற்போது நடைபெற்றுக் கொணடிருக்கிறது. இந்த சீஸனையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல தெலுங்கு, இந்தியிலும் பிக்பாஸ் போட்டி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

 

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மொழி ஒளிபரப்பிலும் ஒரு ஒரு சர்ச்சைகள் வெடித்து வருகிறது. அந்த வகையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் மராத்தி மொழியை அவமதித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

 

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் குமார் சானுவின் மகனும் பாடகருமான ஜான் கலந்துகொண்டுள்ளார். சக போட்டியாளர் நிக்கி தம்போலி தன்னிடம் மராத்தி மொழியில் உரையாடியதற்கு ஜான் கூறுகையில், “என் முன்னால் மராத்தியில் பேச வேண்டாம். இது எனக்கு எரிச்சலூட்டுகிறது. தைரியம் இருந்தால் என்னுடன் ஹிந்தியில் உரையாடு. இல்லாவிட்டால் அமைதியாக இரு” என்றார். 

 

இந்த உரையாடல் ஒளிபரப்பான பிறகு மராத்தி மொழியை அவமதித்ததாக சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து தொலைக்காட்சி நிர்வாகமும் ஜானும் இதற்காக மன்னிப்பு கோரினார்கள். இன்னும் சர்ச்சை தீரவில்லை என்பதால் ஜானுக்காக அவரது தந்தையும் பிரபல பாடகருமான குமார் சானு மன்னிப்பு கோரியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் பேசுகையில், “கடந்த 41 வருடங்களாக எனக்கு தோன்றாத ஒன்றை என் மகன் பேசியுள்ளதாக அறிகிறேன். அவர்களுடன் கடந்த 27 வருடங்களாக வசிக்கவில்லை. என் மகன் என்ன சொல்லி வளர்க்கப்பட்டார் என்று எனக்கு தெரியவில்லை. அவனை அவனுடைய தாய் எப்படி வளர்த்தார் என்று தெரியவில்லை. அவன் எப்படி அப்படி பேசலாம்? மஹாராஷ்டிரா, மும்பை, மும்பை தேவி என்னை வாழ்த்தி பேரும் புகழும் அளித்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன். பல மொழிகளில் நான் பாடியுள்ளேன். இதை எப்படி என் மகன் சொன்னான் எனத் தெரியவில்லை. ஒரு தந்தையாக அனைவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாகுபலி நடிகர்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
bnfxhshsh

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமாகி வருகிறது. இதில் தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினர். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

 

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கடந்த இரண்டு வருடங்களாகத் தொகுத்து வழங்கிய நடிகர் நாகர்ஜுனா, படங்களின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த வருடம் பிக்பாஸ் நிகஸ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்குப் பதிலாக 'பாகுபலி' புகழ் நடிகர் ராணா இதனை தொகுத்து வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

 

Next Story

"நம்புங்க... நானும் நல்லவன்தான்" - குறும்பு குறையாத பாலாஜி!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021
biggboss 4 balaji

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 க்ராண்ட் ஃபினாலே (இறுதிப் போட்டி நாள்) நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பப்பட்டது. வெற்றி பெறப்போவது யார் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்து பார்த்தனர். ஆரி, பாலாஜி இருவருக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில் நீண்ட சஸ்பென்ஸுக்குப் பிறகு வெற்றி பெற்றது ஆரி என்று அறிவித்தார் கமல்ஹாசன். இறுதிப்போட்டி வரை நின்று இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.

 

உடலை கட்டுக்கோப்பாய் பராமரித்து வரும் பாலாஜி, பிக்பாஸுக்கு முன்பே சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டிகளில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். அப்போது கிடைக்காத ஊடக வெளிச்சம் இந்தப் போட்டியில் கிடைத்தால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்தப் போட்டியில் கலந்துகொள்வதாகக் கூறியிருந்தார். பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் பாலாஜி சற்று வித்தியாசமானவரும்  அதிரடியானவரும் ஆவார். ஆரம்பத்தில் இருந்தே அவரது வெளிப்படையான பேச்சும் அதிரடியான நடவடிக்கைகளும் பல பிரச்னைகளை உண்டாக்கின. சில நேரங்களில் உடைந்து கலங்கியும் இருக்கிறார்.

 

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் பலவீனமானவராக பார்க்கப்பட்ட பாலாஜி, நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்களிலும் நடத்தப்படும் போட்டிகளிலும் சிறப்பான வியூகம் அமைத்து தொடர்ந்து விளையாடி வந்தார். பிறரிடம் அவர் நடந்துகொள்ளும் விதம் ஒரு பக்கம் விமர்சனங்களை பெற்று வந்தாலும் ஒரு சாராரிடம் வரவேற்பையும் பெற்றது. இவரது நடவடிக்கையை பார்த்து சில வாரங்களிலேயே வெளியேறிவிடுவார் என்று தான் நினைத்ததாக கமலே கூறியிருந்தார்.

 

இப்படியாக இறுதிச் சுற்று வரை வந்து இரண்டாம் இடம் பெற்ற பாலாஜி, மேடையில் பேசும்போது "நான் எனக்கு தோணுனதை எல்லாம் பேசியிருக்கேன், செஞ்சுருக்கேன். கொஞ்சம் கூட எதையும் மறைக்கல. இப்படி இருந்தா ஜெயிப்போம்னு நினைச்செல்லாம் பண்ணல. விளைவுகளை பற்றி கவலைப்படாம செஞ்சிருக்கேன். ஆனா, அப்படி செஞ்சதோட விளைவா நான் இறுதிப் போட்டிக்கு வருவேன்னு தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லாவே செஞ்சிருப்பேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினார். "ஆனா ஒன்னு... என்னை நம்புங்க, நானும் நல்லவன்தான்" என்று தனது குறும்பு மாறாமல் கலகலப்பாக முடித்தார்.