Skip to main content

13வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பிரபல பாடகரின் பகீர் வாக்குமூலம்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

Bhojpuri singer misbehaved in 13yrs old girl

 

பீகாரைச் சேர்ந்தவர் போஜ்புரி பாடகர் அபிஷேக் என்ற பபுல் பிஹாரி. அவருக்கு வயது 21. இவர் யூட்யூப் சேனலும் நடத்தி வரும் நிலையில் அதை  27 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமியின் ஆடைகளற்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த அச்சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அச்சிறுமியிடம் கேட்ட பொது தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை சொல்லியுள்ளார். 

 

இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அப்பாடகரை கைது செய்தனர். பின்பு விசாரணையில், 2 வருடங்களுக்கு முன்பு பாடகர் அபிஷேக் ராஜீவ் நகர் என்ற பகுதியில் வசித்து வந்த போது 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் நட்பாக பழகிய அவர் ஆசை வார்த்தை கூறி ஒரு ஹோட்டலுக்கு வரச் சொல்லியுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு அச்சிறுமியை புகைப்படமும் எடுத்துள்ளார். 

 

இந்த சம்பவத்தை அச்சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். பின்பு பாடகர் புகைப்படத்தை வெளியிட்டதால் இது வெளியில் தெரிந்துள்ளது. இது தொடர்பாக அப்பாடகர் மீது போக்சோ, ஐ.டி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

12 வயது நவ்யா உமேஷ் பாடியுள்ள இறைவி பாடல்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
12 year old Navya Umesh sung iraivi album

சர்வதேச செஸ் ஒலிம்பியாட், குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட், கேலோ இந்தியா என குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமல்லாது மாவீரன், ஜெயிலர், ஜவான் மற்றும் லால் சலாம் படங்களின் ஆடியோ லான்ச், எனப் பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கலை இயக்குநரும் நிகழ்வு மேலாளருமான உமேஷ் ஜே குமார் மற்றும் நிகழ்வு மேலாளர் ராகிணி முரளிதரன் ஆகியோரின் மகள் நவ்யா உமேஷ்.

ஏழாம் வகுப்பு படித்து வரக்கூடிய இவர், பாடி நடித்த ‘இறைவி’ பாடல் மகளிர் தின கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. வெங்கடேசன் இயக்கியுள்ள இப்பாடலை நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். சமூக தொழில் முனைவோர் தீப்தி வரிகளை எழுதியுள்ளார். ‘என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் ‘கட்சி சேரா’ போன்ற வைரல் வீடியோக்களுக்கு நடனம் அமைத்த ‘தி டான்சர்ஸ் கிளப்’ இந்தப் பாடலுக்கான நடனம் அமைத்துள்ளனர். சோனி மியூசிக்கில் மகளிர் தினத்தன்று வெளியாகியுள்ள இந்தப் பாடலை, இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.