பாவனா, மலையாள நடிகையான இவர் தமிழ்சினிமாவிற்குமிஷ்கின்இயக்கத்தில் வெளியான 'சித்திரம்பேசுதடி' படத்தின் மூலம் அறிமுகமானார்.அடுத்ததாகதமிழில் 'வெயில்', 'தீபாவளி' உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த பாவனா, கடந்த 2017-ஆம் ஆண்டு சில மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்குஆளானதாககுற்றச்சாட்டு எழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டு தற்போது வரை விசாரணை நடந்து கொண்டுவருகிறது.
இதனிடையே பாவனா, 2018-ஆம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர்நவீன்என்பவரைதிருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு கன்னட படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த பாவனா, மற்ற மொழி படங்களில் நடிக்கவில்லை.கடைசியாகதமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'அசல்' படத்திலும், மலையாளத்தில்பிருத்விராஜின்’ஆதம்ஜான்’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஐந்துவருடங்களுக்குபிறகு 'என்டிக்கக்கொருபிரேமாண்டார்ன்னு' என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர்மைமூநாத்அஷ்ரப்இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில்ஷராபுதீன்,அனார்க்கலிநாசர், அர்ஜுன் அசோகன்,செபின்பென்சன்உட்படபலர் நடிக்கின்றனர். நீண்டஇடைவெளிக்குப்பிறகு மலையாள படத்தின்படப்பிடிப்பில்கலந்து கொள்வதற்காக வந்தபாவனாவை, படக்குழு பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவைரலாகிவருகிறது.