முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த பாரதிராஜா!

vdvdvd

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்குப் பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது.

இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர். அந்த வகையில், கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

bharathiraja
இதையும் படியுங்கள்
Subscribe