Skip to main content

அப்போ சரத்... இப்போ பரத்! - 'பொட்டு' கொடுத்த ஷாக்

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

'முனி -2' என்ற கேப்ஷனோடு வெளிவந்த 'காஞ்சனா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த இந்தப் படத்தில் நாயகன் லாரன்ஸைத் தாண்டி கவனமீர்த்தது சரத்குமார் நடித்த பாத்திரம். ஒரு திருநங்கையாக சரத் நடித்த அந்த பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது, படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக திருநங்கைகளை இழிவுபடுத்தியே காட்சிகள் அமைக்கப்பட்டுவந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர்களை அவர்களுக்குரிய மரியாதையுடன் படமாக்குகின்றனர். இந்தப் போக்கின் ஆரம்பமாக அமைந்த படங்களில் ஒன்று 'காஞ்சனா'. இன்னொரு புறம் திகில் + காமெடி என்ற கலவையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இது. இதைத் தொடர்ந்து குறைந்தது முப்பது படங்களாவது இந்த பாணியில் வெளிவந்தன. ஆனால், படம் வெளியாகும் வரை சரத்குமாரின் பாத்திரம் ரகசியமாகவே வைக்கப்பட்டது. முதல் நாள் படம் பார்த்தவர்களுக்கு அது பெரும் சர்ப்ரைஸாக அமைந்தது.

 

pottu movie poster

 

pottu movie barath


தற்போது 'காஞ்சனா' படத்தில் சரத் நடித்த பாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் நடிகர் பரத் நடித்துள்ள 'பொட்டு' படத்தின் போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது. திருநங்கை போன்ற தோற்றத்தில் இருக்கும் பரத் பெரிய பொட்டுடன் கையில் கண்ணாடியுடன் இருக்கிறார். ஏற்கனவே வெளிவந்த போஸ்டர்கள் மூலம் 'பொட்டு' படம் ஒரு திகில் படமென்பது தெரிகிறது. இந்தப் படத்தை இயக்கியுள்ள வி.சி.வடிவுடையான் தற்போது சன்னி லியோன் நடிக்கும் 'வீரமாதேவி' படத்தை இயக்கி வருகிறார். வருகிற மார்ச் 8ஆம் தேதி 'பொட்டு' படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலீஸ் தேர்வு எழுத உத்தரப் பிரதேசம் வந்த சன்னி லியோன்?

Published on 18/02/2024 | Edited on 19/02/2024
Sunny Leone picture in police exam hall ticket in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நேற்று (17-02-24) நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 

இந்த நிலையில், தேர்வர்களுக்கு அளிக்கப்படும் அனுமதிச் சீட்டு ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேர்வு அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து தேர்வு வாரியம் கூறியதாவது, ‘கன்னோஜ் பகுதி தேர்வு மையத்தை குறிப்பிட்ட அந்த அனுமதிச் சீட்டில் உள்ள அனைத்து தகவலும் போலியானது. மேலும், இந்த பதிவு எண் கொண்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத யாரும் வரவில்லை’ என்று தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் கொண்ட அனுமதிச் சீட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Story

சன்னி லியோன் வீட்டில் நடந்த சோகம்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

sunny leone house worker baby missing issue

 

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் 1 குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று வளர்த்து வருகிறார். மேலும் நிறைய நலத்திட்ட உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகிறார்.  

 

இந்த நிலையில் தனது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணின் மகள் காணாமல் போனதாக இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், மும்பை போலீஸ் பக்கத்தை டேக் செய்து,  "தனது பணிப்பெண்ணின் 9 வயது மகள் அனுஷ்கா கிரண், நேற்று மாலை 7 மணி முதல் காணவில்லை. அந்த சிறுமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு, ரூ.11,000 கொடுக்கப்படும் என" என குறிப்பிட்டிருந்தார். இது மட்டுமல்லாது அவர் தனிப்பட்ட முறையில் ரூ.50,000 கொடுப்பதாக பதிவிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் காணாமல் போன அந்த சிறுமி தற்போது கிடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைத்தது. கடவுள் மிகவும் பெரியவர். கடவுள் இந்த குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக. 24 மணி நேரம் கழித்து அனுஷ்காவை மீட்டெடுத்தோம்” என குறிப்பிட்டு மும்பை காவல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)