Skip to main content

விமான நிறுவனங்களைக் கடுமையாக விமர்சித்த பிரபல பாடகர்

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

benny dayal  criticized airlines

 

தமிழில் ரஜினி, கமல், அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் பாடல்களுக்கு பாடியவர் பாடகர் பென்னி தயால்.  இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் விமான நிலையங்கள் குறித்து ஒரு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது எந்த ஒரு விமான நிறுவனமும் இசை சம்பந்தமான கருவிகளை சரியாக கையாளுவதில்லை. அதனால் இசைக் கருவிகள் உடைந்து விடுவதாகக் கூறியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு இசைக் கலைஞர்களும் கடுமையாக உழைத்து தனக்கு ஆசையான கருவிகளை வாங்குகிறார்கள். அதனை வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது விமானம் மூலம் எடுத்து வருகின்றனர். அந்த இசை கருவிகளை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்று விமான ஊழியர்கள் நினைக்க வேண்டும். ஆனால் பலர் அப்படி பார்ப்பதில்லை. இசைக்கருவிகள் விமான பயணத்தில் உடைந்ததாக பல இசைக் கலைஞர்கள் குறை கூறியுள்ளார்கள். 

 

அது எனக்கும் நடந்திருக்கிறது. ஒரு முறை நான் விமானத்தில் பயணிக்கையில் என் இசைக் கருவிகள் அனைத்தும் 7 நாள் இடைவெளியில் உடைந்த நிலையில் கிடைத்தன. அந்த உடைந்த கருவிகளுக்கு அந்த விமானம் நிறுவனம் தான் பொறுப்பேற்று திருப்பி தர வேண்டும். ஊழியர்களுக்கு கருவிகளை எப்படி கையாள வேண்டும் என்பதை நிறுவனங்கள் சொல்லி கொடுக்க தவறுவதால் மீண்டும் மீண்டும் எங்களுடைய இசைக்கருவிகள் உடைந்த நிலையிலே எங்களுக்கு கிடைக்கிறது. ஆனால் அதற்கு நீங்கள் கொஞ்சம் கூட பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டுகிறீர்கள். இப்படியான மனப்போக்கை ஏற்ற கொள்ள முடியாது. 

 

ஒவ்வொரு முறையும் நாங்கள் அனைத்து லக்கேஜுக்கும் உரிய கட்டணம் செலுத்துகிறோம். இசை கருவிகளை முறையாக பேக் செய்தும் தருகிறோம்.அதனால் தயவு செய்து கெஞ்சி கேட்கிறேன். கருவிகளை பொறுப்புடன் கையாளுங்கள். கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்" என் கோவமாக பேசியுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.