‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.செல்வராகவன், யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வந்த படக்குழு தற்போது சென்னையில் பெரிய ஷாப்பிங் மால் அரங்கு அமைத்து படப்பிடிப்பைநடத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னையில்கடந்த நான்கு நாட்களாக கனமழைபெய்தது. இதனால் தலைநகரமானசென்னை தண்ணீரில் தத்தளித்தது. சாலைகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அந்த வகையில்பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்குள் மழைநீர் புகுந்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட அரங்கிற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் அரங்கை சுற்றியுள்ள பகுதியில்தான் தண்ணீர் புகுந்துள்ளதாககூறப்படுகிறது. இதனால் படத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள படக்குழு மழை நீரை வெளியேற்றிய பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.