Skip to main content

”நான் எடுக்க வேண்டிய படத்த நீ எடுத்து வச்சுருக்க...?” - இளம் இயக்குனரிடம் கேட்ட பாரதிராஜா

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

ஞானச்செருக்கு... உலகத்திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரையுலகின் பெருமையை பேசிக்கொண்டிருக்கும் அடுத்த திரைப்படம். மறைந்த ஓவியர் வீரசந்தானம், முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன். 
 

gnanacheruku

 

 

“உலகத் திரைப்பட விழாக்களுக்கு போட்டிக்காக அனுப்பப்பட்டதில் ஏறக்குறைய 8 மாதங்கள் உலகம் முழுக்க பயணித்து,  7 சர்வதேச விருதுகளையும், 30க்கும் மேற்பட்ட இடங்களில் சிறந்த படத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது” என்று இயக்குனர் ஒருமுறை நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

ஒரு சிறப்புக் காட்சியில் இப்படத்தை பார்த்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனரை பாராட்டியுள்ளார். அதை இயக்குனர் தரணி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்று(23-12-19) ஐயா பாரதிராஜா ஞானச்செருக்கு படத்தை பார்த்தார். என்ன சொல்லுவது, படத்தை கொண்டாடினார். நெகிழ்ச்சியான தருணம். வார்த்தைகள் அவர் உள்மனதில் இருந்து வெளிப்பட்டது. இசை வெளியீட்டு விழாவிற்கு நிச்சயம் வருவேன் என்றார். அவர் வார்த்தைகள் படம் பார்த்து முடித்தவுடன்... "உன் வயசு என்ன... நா எடுக்க வேண்டிய படத்த நீ எடுத்து வச்சிருக்க. இதுக்காகவே Hatsoff. ரொம்ப முக்கியமான படைப்பு இது". 

விரைவில் திரையில் வெளிவரவிருக்கும் இப்படம் தமிழ் திரையுலகின் இன்னொரு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய காவலாளி... ஏ.வி.எம் வாசலில் நின்று சபதம் எடுத்த பாரதிராஜா!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

தமிழ்த்திரையுலகில் முன்னணி இயக்குநராகக் கொடிகட்டிப் பறந்தவர் பாரதிராஜா. புதுமை இயக்குநரான பாரதிராஜா எப்படி ஆழமான முத்திரைகளைப் பதித்தார் என்பது வரலாறு. ஆரம்பக்காலத்தில் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி, அதில் கிடைத்த நீண்ட அனுபவம் மூலமாக 16 வயதினிலே படத்தை இயக்கினார். உதவி இயக்குநராகச் சேர்வதற்கு முந்தைய காலகட்டம் பாரதிராஜாவிற்கு எப்படி இருந்தது?

 

அந்தக் காலகட்டங்களில் வடபழனியில் நிறைய ஸ்டூடியோக்கள் இருக்கும். இன்றைக்கு அவை மருத்துவமனைகளாகவும் திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. 30 வருடத்திற்கு முன்பு ஏ.வி.எம் ஸ்டூடியோவைப் பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குள் எல்லோராலும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது. வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்துவிடுவார்கள். ஏ.வி.எம் ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்து செல்வதையே பலர் பிறவிப்பயனாக நினைப்பார்கள். ஏ.வி.எம் மட்டுமல்ல வாகினி, சத்யா, ஜெமினி ஆகிய ஸ்டூடியோவிற்குள் நுழைவதென்பதும் பெரிய விஷயம். முதன்முறையாக பி.ஆர்.ஓவாக அந்த ஸ்டூடியோவிற்குள் நுழைந்தபோது எனக்கும் அதே உணர்வுதான் இருந்தது. 

 

நடிகராக வேண்டும் என்ற ஆசையுடன்தான் பாரதிராஜா ஊரிலிருந்து சென்னைக்கு வந்தார். இங்கு வந்து நடிக்க வாய்ப்பு கேட்டு ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குச் சென்றுள்ளார். வழக்கம்போல வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்து நிறுத்திவிடுகின்றனர். கடைசியில் அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுகின்றனர். அதில், அதிருப்தியான பாரதிராஜா, 'பெரிய நடிகராகி இதே ஸ்டூடியோவிற்குள் ஒருநாள் நான் நுழைவேன்' என வெளியே நின்று சபதம் எடுத்துக்கொண்டு கிளம்பிவந்தாராம். அப்படியே காலங்கள் ஓடின. ஒரு கட்டத்தில் இயக்குநராக முடிவெடுத்த பாரதிராஜா, ஜெகநாதன், ஏ.எஸ்.பிரகாசம், ரா.சங்கரன் உட்பட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் வெளியானபோது பெரிய அளவில் பேசப்பட்டது. யார் இந்த பாரதிராஜா... இப்படிப்பட்ட ஒரு திறமைசாலி எங்கிருந்து வந்தார் என அனைவரும் பேசவும் தேடவும் ஆரம்பித்தனர்.

 

அதனைத் தொடர்ந்து வெளியாகிய கிழக்கே போகும் ரயில், தேவி காம்ப்ளக்சில் 50 வாரங்கள் ஓடியது. அதன் பின்னர் வெளியான புதிய வார்ப்புகள் 175 நாட்கள், சிகப்பு ரோஜாக்கள் 100 நாட்கள், நிறம் மாறாத பூக்கள் 125 நாட்கள் என தொடர்ந்து 5 வெற்றிப்படங்கள் கொடுத்தார். இந்த ஐந்து படங்கள் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குநர் என்றால் அது பாரதிராஜாதான் என்றானது. பாரதிராஜா படம் வெளியாகிறது என்றால் தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரே நேரத்தில் ஆயிரம்பேர் அமர்ந்து படம் பார்ப்பார்கள். எந்த ஏ.வி.எம் ஸ்டூடியோ வாசலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டாரோ பின்னாட்களில் அதே நிறுவனம் பாரதிராஜா இயக்கிய படத்தைத் தயாரித்தது. எந்த ஸ்டூடியோவில் அவமானப்படுத்தப்பட்டாரோ அதே நிறுவனத்திற்கு படம் இயக்குவதென்பது எவ்வளவு பெரிய வெற்றி என யோசித்துப்பாருங்கள். இயக்குநராகத் தன்னை நிரூபித்த பின், ராஜமரியாதையுடன் அந்த ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்தார் பாரதிராஜா.

 

 

Next Story

கண்கலங்கிய பாரதிராஜா... படுத்த படுக்கையில் நடிகர் பாபு!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021
barathiraja

 


தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா. அவருடைய ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாபு.

 

அண்மையில் அவரது உடல்நிலை குறித்து வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் படத்திலேயே தனது நடிப்பால் கவனம் பெற்ற பாபுவுக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. 14 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் பாபு. ஆனால், மனசார வாழ்த்துங்களேன் படத்தில் நடித்தபோது பெரும் சோதனை ஏற்பட்டது.

 

ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்கு முதுகில் அடிபட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார் நடிகர் பாபு. இருந்தபோதிலும் அவரால் பழையமாதிரி எழுந்து நடமாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதன்பிறகு 20 வருடமாக படுத்த படுக்கையாகவே சிகிச்சை பெற்று வருகிறார்.

 

நடிகர் பாபுவை அறிமுகம் செய்த இயக்குனர் பாரதிராஜா அண்மையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் சென்றிருந்தார். அப்போது அவர் கண்கலங்கி நடிகர் பாபுவுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தார். கஷ்டத்தில் இருக்கும் பாபுவின் மருத்துவ உதவிக்காக நிதியுதவி அளித்துவிட்டு வந்துள்ளார்.பாபுவை பாரதிராஜா சந்தித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வரைலாகி வருகிறது.