Skip to main content

'பல்லு படாம பாத்துக்க' பட டைட்டில் காரணம் இதுதான்' - இசையமைப்பாளர் ஓபன் டாக்

Published on 22/06/2018 | Edited on 23/06/2018
balamurali

 

'பீச்சாங்கை' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான பாலமுரளி பாலு அடுத்ததாக 'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படங்கள் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து வித்யாசமான படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் இசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'டிராபிக் ராமசாமி' படம் இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து இவர் அடுத்ததாக 'கஜினிகாந்த்', 'பல்லு படாம பாத்துக்க', 'தட்றோம் தூக்குறோம்' ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தன் அடுத்தடுத்த படங்களை பற்றியும், தற்போது இசையமைத்திருக்கும் டிராபிக் ராமசாமி படத்தை பற்றியும் பாலமுரளி பாலு நம்முடன் பேசும்போது.... 

 

 


"நான் இசையமைத்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தாண்டி அதில் இடம்பெற்ற 'அழுக்கு ஜட்டி அமுதவள்ளி' பாடலால் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. யு டியூபில் இந்த பாடலுக்கு அமுதவள்ளி என்ற பெண் 'என் பெயர் அமுத வள்ளி. நீங்கள் இந்த பாடலை போட்டதனால் நண்பர்கள் அனைவரும் என்னை கிண்டல் செய்கின்றனர். எனக்கு ஒரு அழுகையாக வருகிறது' என்று கமண்ட் செய்திருந்தார். அதை பார்த்தவுடன் எனக்கு ரொம்ப வருத்தமாகிவிட்டது.

பின்னர் அந்த பெண்ணிடம் வேறு ஒரு ஐடியில் இருந்து தொடர்பு கொண்டு சமாதானம் படுத்தினேன். அதிலிருந்து இனி பொறுப்புடன் பாடல்கள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. ஒரு 85 வயது முதியவர் இந்த வயதில் இவ்வுளவு செய்யும்போது நாம் நம் வாழ்வில் என்ன செய்தோம் என்று தோன்றியதை சவாலாக எடுத்துக்கொண்டு நான் இசையமைத்த படம் 'டிராபிக் ராமசாமி'. படத்தில் வரும் உணர்ச்சிகரமான பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

 

 


நான் அடுத்து இசையமைத்திருக்கும் 'கஜினிகாந்த்' படம் குடும்பத்துடன் சென்று பார்க்கும் யு சான்றிதழ் படமாக இருக்கும். ராகங்களை முன்னிறுத்தி வரும் பாடல்கள் இப்போது அபூர்வமாக உள்ளதால், இப்படத்தில் 'ஸ்ரீ ராகம்' என்ற ராகத்தில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளேன். மேலும் இந்த பாடல் உட்பட மொத்தம் மூன்று பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். இதையடுத்து நான் 'பல்லு படாம பாத்துக்க' படத்திற்கு இசையமைத்துள்ளேன். இது ஒரு  'சோம்பி' வகை காமெடி படம். படத்தின் டைட்டிலான 'பல்லு படாம பாத்துக்க' என்பது சோம்பிவுடைய பல் நம் மேல் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். அப்படி சோம்பி பல் நம் மேல் பட்டால் நாமும் சோம்பி ஆகிவிடுவோம் என்பதனால் இப்படத்திற்கு இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 

 


இதுவரை நான் இயக்குனர்களுக்கு ஏற்றவாறு பாடல்கள் கொடுத்தேன். இந்த படத்தின் இசை அப்படி இல்லாமல் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். படத்தில் பேய்களின் சத்தத்தை வைத்து ஒரு பாடலும், ஜாஸ் கலந்த டப்பாங்குத்து பாடலும், ஒரு வித்தியாசமான குத்து பாடலும் உள்ளது. இதைத்தொடர்ந்து நான் புதுமுகங்கள் நடிக்கும் 'தட்றோம் தூக்குறோம்' படத்திற்கும் இசையமைத்து வருகிறேன்" என்று மனம் திறந்து பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ரஜினி,கமல் ஜீரோ;சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார்- சீமான்!!

Published on 06/01/2019 | Edited on 06/01/2019

சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த  இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

SEEMAN

 

உண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.

 

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே என் தம்பி சிலம்பரசன்தான். மூன்று படம் சிம்புவை வைத்து எடுக்கப்போவதாக முடிவு செய்தாச்சு. அதோட பலபேர் நெஞ்சு வெடிக்க போகுது.  தனக்கு நேர்மையானவன், துணிவானவன், அச்சப்படாதவன் அவன்தான் ரியல் சூப்பர் ஸ்டார். கொளுத்தி எடுக்குறோம் அண்ணனும் தம்பியும் சேர்ந்து.

 

எல்லார்கிட்டையும் கதையை சொன்னேன் எல்லாரும் பயந்துட்டாங்க ஆனா நான் நடிக்கிறேன் அண்ணா என்று என் தம்பி சிம்பு மட்டும்தான் சொன்னார். ஏன் சொன்னார் அவர்தான் தமிழன்.  அண்ணாவுக்கு எம்ஜிஆர் அண்ணனுக்கு நீதான்'னு சொல்லிட்டேன்.

என்றார் நகைச்சுவையாக.