Skip to main content

விளையாட்டாக செய்த பாலகிருஷ்ணா ; வலுக்கும் கண்டனங்கள்

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

Balakrishna video goes viral ; Strengthening condemnations

 

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான என்.டி. ராமாராவின் மகன் பாலகிருஷ்ணா. தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகராக அறியப்படுகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'அகண்டா' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தயாரிப்பில் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் துனியா விஜய், ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறர்.  

 

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலகிருஷ்ணா தூங்கி கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொல்லியுள்ளார். அந்த நிகழ்ச்சியின் போது பாலகிருஷ்ணாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாலகிருஷ்ணா ரசிகரின் தோளில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி போஸ் கொடுக்க சொல்லியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் பாலகிருஷ்ணாவை விமர்சித்தும் கண்டனங்களையும் எழுப்பி வருகின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கும்பகோணத்தில் சாமி தரிசனம் செய்த பாலகிருஷ்ணா

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

balakrishna Sami dharisanam at kumbakonam

 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா, கடைசியாக 'பகவந்த் கேசரி' படத்தில் நடித்திருந்தார். கடந்த 19ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தனது 109வது படமாக இயக்குநர் கேஎஸ் ரவிந்திர என்கிற பாபியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 

 

இந்த நிலையில் தமிழ்நாடு வந்துள்ள பாலகிருஷ்ணா, கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

 

 

Next Story

மீசையை முறுக்கித் தொடையைத் தட்டிய பாலையா; சட்டசபையில் பரபரப்பு

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

balakrishna condemn for chandrababu naidu arrest in assembly

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்திரபாபு நாயுடு கைதைத் தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

 

இந்த நிலையில் ஆந்திர சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. கேள்வி நேரம் நடைபெற்ற போது சபாநாயகர் இருக்கையை நோக்கிச் சென்ற தெலுங்கு தேச கட்சியினர் சபாநாயகரைச் சூழ்ந்து கொண்டு சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 

 

அப்போது நடிகரும் அக்கட்சியின் எம்.எல்.ஏ-வுமான பாலகிருஷ்ணா மீசையை முறுக்கித் தொடையைத் தட்டி தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். உடனே சபையில் இருந்த அமைச்சர் ராம்பாபு, "சினிமாவில் வேண்டுமானால் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கட்டும். இங்கே வேண்டாம்" எனக் குரல் எழுப்பினார். பின்பு அங்கே இரு தரப்பும் கூச்சலிட்டதால், நீண்ட நேரம் பெரும் அமளி ஏற்பட்டது. இதனால் சட்டசபையே பரபரப்பாகக் காணப்பட்டது.