Skip to main content

"ஜெய் பாலையா... ஜெய் பாலையா..." ; கிடா வெட்டிய ரசிகர்கள் - அதிரடி காட்டிய போலீஸ் 

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

balakrishna fans celebration video goes viral on internet

 

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாலகிருஷ்ணா ரசிகர்கள் வழக்கம்போல பட்டாசு, பேனர் எனக் கொண்டாடினர். அந்த வகையில் அமெரிக்காவில் ஒரு திரையரங்கில் பாலகிருஷ்ணா ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடிய நிலையில், அது அந்நாட்டின் சட்ட திட்டத்திற்கு விரோதமானது என்று கூறி போலீசார் ரசிகர்களை எச்சரித்தனர். 

 

இதனிடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 'வீர சிம்ஹா ரெட்டி' ஓடிக்கொண்டிருந்த திரையரங்கின் திரையில் திடீரென தீப்பிடித்தது. உற்சாகத்தில் சில ரசிகர்கள் தீ வைத்து விட்டதாகச் சொல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

 

இந்த நிலையில் மற்றொரு திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடிய வீடியோவும் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. திருப்பதியில் உள்ள ஒரு திரையரங்கில் வழக்கம் போல கோலாகலமாகக் கொண்டாடிய ரசிகர்கள் புதிதாக இன்னொரு செயலையும் செய்துள்ளார்கள். திரையரங்கின் முன்னே படம் வெற்றி பெற ஒரு ஆட்டுக் கிடாவை கொண்டு வந்து வெட்டியுள்ளனர். அப்போது "ஜெய் பாலையா... ஜெய் பாலையா..." எனக் கோஷமிட்டனர். இதே போல் கிழக்கு கோதாவரியில் உள்ள ஒரு திரையரங்கில் கிடா வெட்டி பலி கொடுத்துள்ளனர். 

 

ரசிகர்களின் இந்த செயலுக்கு விலங்குகள் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் கிடா வெட்டிக் கொண்டாடிய ரசிகர்கள் 10 பேரை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கும்பகோணத்தில் சாமி தரிசனம் செய்த பாலகிருஷ்ணா

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

balakrishna Sami dharisanam at kumbakonam

 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா, கடைசியாக 'பகவந்த் கேசரி' படத்தில் நடித்திருந்தார். கடந்த 19ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தனது 109வது படமாக இயக்குநர் கேஎஸ் ரவிந்திர என்கிற பாபியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 

 

இந்த நிலையில் தமிழ்நாடு வந்துள்ள பாலகிருஷ்ணா, கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

 

 

Next Story

மீசையை முறுக்கித் தொடையைத் தட்டிய பாலையா; சட்டசபையில் பரபரப்பு

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

balakrishna condemn for chandrababu naidu arrest in assembly

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்திரபாபு நாயுடு கைதைத் தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

 

இந்த நிலையில் ஆந்திர சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. கேள்வி நேரம் நடைபெற்ற போது சபாநாயகர் இருக்கையை நோக்கிச் சென்ற தெலுங்கு தேச கட்சியினர் சபாநாயகரைச் சூழ்ந்து கொண்டு சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 

 

அப்போது நடிகரும் அக்கட்சியின் எம்.எல்.ஏ-வுமான பாலகிருஷ்ணா மீசையை முறுக்கித் தொடையைத் தட்டி தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். உடனே சபையில் இருந்த அமைச்சர் ராம்பாபு, "சினிமாவில் வேண்டுமானால் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கட்டும். இங்கே வேண்டாம்" எனக் குரல் எழுப்பினார். பின்பு அங்கே இரு தரப்பும் கூச்சலிட்டதால், நீண்ட நேரம் பெரும் அமளி ஏற்பட்டது. இதனால் சட்டசபையே பரபரப்பாகக் காணப்பட்டது.