Advertisment

''அன்பு பெற்றோர்களே, மகன்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்'' - நடிகர் பால சரவணன் வேண்டுகோள்!

bfdb

ஜோதிகா நாயகியாக நடித்து, கே.பாக்யராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'.

Advertisment

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் சென்ற மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வரும் நிலையில் நடிகர் பால சரவணன் 'பொன்மகள் வந்தாள்' படத்தைப் பாராட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''அன்பு பெற்றோர்களேமகன்களுக்குச் சொல்லிக்கொடுங்கள் பெண்கள் அனைவரும் பொன்மகள்கள் என்று,தாயை விட அதிகமாக மதிக்கப்பட வேண்டியவர்கள். போற்றப்பட வேண்டியவரகள்,ஆண்களை விட எண்ணிலடங்கா மடங்கு உயர்ந்தவர்கள் என்று'' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

bala saravanan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe