ADVERTISEMENT

சசிகலா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைத்த பாக்யராஜ்!

10:23 AM Feb 16, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

திரைத்துறை தன் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அதற்கு வலுசேர்க்கும் வகையில் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு வாய்ப்பைத் தரும் தளமாக உருவாகியுள்ளது சசிகலா தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் இளம் இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வெப் சீரிஸ், குறும்பட இயக்குனர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் படத் தயாரிப்பு சார்ந்த அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் இது இளம் மாணவ இயக்குனர்கள் மற்றும் அறிமுக இயக்குனர்களுக்குப் புரொடக்சன் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்குத் தேவையான உதவிகளையும், அதோடு மேலும் சில சிறப்பு சலுகைகளையும் செய்யத் தயாராக உள்ளது என்பதை இதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சினிமா துறை சார்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘Freedom of Film making’ எனும் தாரக மந்திரத்துடன் விரைவில் இதன் பணிகள் துவங்கவுள்ளன. இதனைப் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள், நடிகை சாய் தன்ஷிகா, நடிகர் இசையமைப்பாளர் அம்ரிஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது... "இது வாய்ப்புக்காகக் காத்திருக்கும் கலைஞர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். இந்தத் தயாரிப்பு நிறுவனம் தரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது அதன் கட்டமைப்பிலேயே புரிகிறது. மேலும் இந்நிறுவனத்திலிருந்து பல தரமான கலைஞர்கள் வெளி வருவார்கள்" எனக் கூறியிருந்தார்.

நடிகை தன்ஷிகா பேசுகையில்... "நாம் படங்களின் விமர்சனங்களை ஒரு நொடியில் விவரித்து விடுகின்றோம். ஆனால் திரைக்குப் பின் பல கலைஞர்கள் உழைக்கின்றனர். அத்தகைய கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் இந்நிறுவனம் அமைந்திருப்பது சிறப்பு" எனக் கூறினார். இசையமைப்பாளர் அம்ரிஷ் பேசுகையில்... "குட்டி ஏவிஎம் விரைவில் உருவாக்கப்படும்" எனக் கூறினார். இந்த நிறுவனம் விரைவில் தனது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடவுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT