Skip to main content

'பாகுபலி'யின் அடுத்த படம்... மூன்று மொழிகளில்...

Published on 07/09/2018 | Edited on 08/09/2018
prabas

 

பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் மிகுந்த எதிர்பார்ப்புடன் மிக பிரமாண்டமாக தயாராகி வரும் 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார். தனது தனித்துவமான நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ள நடிகர் பிரபாஸ் 'சாஹோ' படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் இயக்குனர் கே.கே.ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கின்றார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என முன்று மொழிகளில் மிகுந்த பொருட்செலவில பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார். கோபி கிருஷ்ணா மூவிஸ் உடன் இணைந்து UV கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க காட்சி நேற்று படமாக்கப்பட்டது. ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அமித் திரிவேதி, படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத், புரொடக்ஷன் டிசைனராக ரவீந்தர் என பல பிரபலங்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை பல்வேறு நாடுகளில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் பிரபாஸ் நடிக்கும் இந்த புதிய படத்தின் அறிவிப்பும் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரமாண்ட வெப் சீரிஸில் நடிக்கிறாரா நயன்தாரா? 

Published on 17/07/2021 | Edited on 17/07/2021
vdgadgs

 

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி, பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான பாகுபலி படங்கள் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் சிவகாமி தேவி ராஜமாதாவாக வரும் ரம்யா கிருஷ்ணன் வீரமான, துணிச்சலான, தலைமைப்பண்புடன் கூடிய அரசியாக நடித்து பிரமிப்பூட்டினார். இந்நிலையில், சிவகாமி தேவியின் இளம் வயது வாழ்க்கையை 'பாகுபலி 3' என்ற பெயரில் தற்போது வெப் சீரிஸுக்காக 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கவிருக்கிறார்கள். 

 

சுமார் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ் பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாகுபலி முதல் பாகத்துக்கு முன்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதாக இந்த வெப் சீரிஸ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வரும் நிலையில் இத்தொடரில் சிவகாமி தேவியாக  நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கி தொடர்ந்து நடக்கவுள்ளது. மேலும் இது அடுத்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Next Story

"'பாகுபலி 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல. அது...'' - நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சி 

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

bdg

 

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி, பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிப்பில் கடந்த 2017- ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியான பாகுபலி-  2 படம் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, நடிகர் பிரபாஸ் இதுகுறித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

''பாகுபலி- 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும், 'பாகுபலி- 2' மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கிறேன். மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.