Skip to main content

அப்போ லேடி சூப்பர் ஸ்டார்... இப்போ சூப்பர் ஸ்டார்... கலக்கும் பேபி ஸ்டார்!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

தமிழ் சினிமாவில் நடிக்கும் ஸ்டார்களை தாண்டி அவர்களுடன் நடிக்கும் துணை நடிகர்கள் மற்றும் குழந்தை நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் வரவேற்பது சவாலாகவே இருக்கிறது. அதை மீறியும் சிலர் தங்களின் கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர். குறிப்பாக குழந்தை நட்சத்திரங்கள் தங்களின் திறமையால் ரசிகர்களை ஈர்க்கிறார்கள். அந்த காலத்தில் நடிகை ஸ்ரீதேவி மற்றும் குட்டி பத்மினி குழந்தை நட்சத்திரங்களாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்கள்.
 

manasvi

 

 

இவர்களை அடுத்து ஷாலினி, பேபி ஷாமினி என இருவரும் தங்களின் சுட்டி, மழலை நடிப்புகளால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றனர். இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தெய்வத் திருமகள் படத்தில் நடித்த பேபி சாரா, அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படத்தில் சிறப்பாக நடித்த பேபி அனிகா மற்றும் தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்த பேபி நைனிகா ரசிகர்களை ஈர்த்தார்கள்.
 

தற்போது இவர்கள் வரிசையில் இணைந்துள்ளார் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி. இமைக்கா நொடிகள் படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரின் மகளாக நடித்த இந்த பேபி ஸ்டார், அவரின் துறுதுறு பேச்சால், அதிரடி நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். போ போய் சிக்னல்ல பிச்சை எடு என்று அந்த படத்தில் மழலை குரலில் இவர் பேசியது பல மீம்களில் இடம் பிடித்து வைரலானது. இந்த குட்டி வயதில் இப்படி பிரபலமாக இருக்கும் இவர் யார் தெரியுமா? காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள்.
 

இவர் சதுரங்க வேட்டை 2 படத்திலும் நடித்துள்ளார். ஆனால், அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் பேபி ஸ்டார் மானஸ்வி தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அப்பாவை மிஞ்சும் மகளாக மானஸ்வி வளர்ந்துவிட்டார். என்னுடைய மகள் இவ்வளவு பேமஸாவது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கொட்டாச்சியே பல பேட்டியில் கூறியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டாருடனும் நடிச்சாச்சு, இப்போ சூப்பர் ஸ்டாருடன் நடிக்கப்போறோம் என பேபியும் டேடியும் வெரி ஹேப்பி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.