Skip to main content

“என் படத்தை ஹோமோபோபிக்தான் பார்க்க வேண்டும்”- ஆயுஷ்மான் குரானா

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

இந்திய சினிமாவில் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு வித்தியாசமான முயற்சி செய்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும் நடிகர் ஆயுஷ்மான் குரானா. இவரது நடிப்பில் வெளியான கடைசி ஏழு படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
 

ayushman khurana

 

 

இந்நிலையில் இந்த வருடத்தின் இவரது நடிப்பில் முதல் படமாக வெளியாகவுள்ள படம்‘சுப் மங்கள் ஸ்யாதா சாவ்தான்’. இதில் ஆயுஷ்மான் குரானா மற்றும் ஜிதேந்திர குமார் ஓரினச்சேர்கையாளர்களாக நடிக்கின்றனர். இவ்விருவரின் காதலையும் புரிந்துக்கொள்ளாத குடும்பத்தாருக்கும் சமூகத்திற்கும் ஓரினச்சேர்கை என்பது இயற்கையானதே என்பதை உணர்த்துவதுதான் இப்படித்தின் கதை.
 

day night


இதுவரை வெளியாகியுள்ள படத்தின் ட்ரைலரும், பாடல்களும் பலரை ஈர்த்துள்ள நிலையில் இப்படத்தை ஹோமோபோபிக்தான் பார்க்க வேண்டும், அவர்கள்தான் இப்படித்தின் டார்கெட் ஆடியன்ஸ் என்று ஆயுஷ்மான் குரானா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

எல்ஜிபிடி சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த படத்தை பார்த்து புரிந்துக்கொள்ள எதுவும் இல்லை, ஒரினச்சேர்க்கையாளர்களை பார்த்தாலே வெறுப்படைபவர்களும், பயப்படுபவர்களும்தான் இதை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலகில் சக்தி வாய்ந்த 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த இந்திய மூதாட்டி...

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

times 100 most influential 2020

 

டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள உலகில் சக்தி வாய்ந்த 100 நபர்களின் பட்டியலில் ஷாஹீன்பாக் போராட்டத்தில் பங்கேற்ற 82 வயதான மூதாட்டி பில்கிஸ், பிரதமர் மோடி உட்பட ஐந்து இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். 

 

உலகப்புகழ் பெற்ற டைம்ஸ் இதழ், ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சக்திவாய்ந்த 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, நடிகர் ஆயுஷ்மான் குரானா, சுந்தர் பிச்சை ஆகிய பிரபலங்கள் இடம்பிடித்துள்ளனர்.

 

இவர்களைத் தவிர, எய்ட்ஸ் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் எய்ட்ஸ் நோயாளி ஒருவரைக் குணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய மருத்துவர் ரவீந்திர குப்தா இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மேலும், இந்தப் பட்டியலில் ஷாஹீன்பாக் போராட்டத்தில் பங்கேற்ற 82 வயதான மூதாட்டி பில்கிஸ் இடம்பிடித்துள்ளார். டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

''எழுந்து நடனமாடுவது போல் உணர்கிறேன்'' - அமிதாப் பச்சன் ட்வீட்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

dsvd


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், ஆயுஷ்மான் குரானாவும் இணைந்து நடித்துள்ள படம் ‘குலாபோ சிதாபோ’. மேலும் இந்தப் படத்தில் பிஜேந்திர காலா, விஜய் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 


சுஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கரோனா பாதிப்பால் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீஸாகிறது. வருகிற ஜூன் 12ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸாகும் இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வரும் நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் இப்படத்தில் வரும் 'மாதரி கா பந்தர்' எனத் தொடங்கும் பாடலை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு, ''நகர்கிறேன், வளர்கிறேன், எழுந்து நடனமாடுவது போல் உணர்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.