/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ayalan-art.jpg)
'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உருவாகி வரும் படம் 'அயலான்'. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024 பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.
இப்படத்தின் டீசர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. டீசர் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகத்தெரிவித்திருந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் படத்திற்கு உலகளவில் பல நாடுகளில் மற்றும் திரை எண்ணிக்கையில் அதிகளவு வெளியாகும் திரைப்படம் அயலான் எனப் படக்குழு தெரிவித்தது. பின்பு இப்படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் எனவும் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் ஒப்பந்தத்தை மீறி அயலான்படத்தை வெளியிடுவதாக டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த மனுவில், “கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.10 கோடி கடனாகப் பெற்றிருந்த நிலையில், ரூ. 3 கோடி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தினை4 வாரங்களுக்கு வெளியிடச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)