Skip to main content

மிரட்டும் அவதார் 2 புகைப்படங்கள்...

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

ஜேம்ஸ் கேமரூனின் கனவு படமான அவதார் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்தை தொடர்ந்து அவதார் படத்தை பல வருட தயாரிப்புக்கு பின் எடுத்தார் ஜேம்ஸ். இத்தனை வருட காத்திருப்பிற்கு கிடைத்த பரிசு உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை. சுமார் 2.7 பில்லியன் டாலர் சம்பாதித்தது. தற்போது இந்த வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் முறியடித்து அவதாரை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளது.
 

avatar 2

 

 

இந்நிலையில் அவதார் படத்தில் மேலும் நான்கு பாகங்களை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக 2010ஆம் ஆண்டு அறிவிப்பு செய்தது. இரண்டாம் பாகமும், மூன்றாம் பாகமும் 2014, 2015ஆம் ஆண்டு வெளியிடுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப வசதிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதால் இன்னும் தாமதமாகும் என்று அறிவித்தார்கள்.  
 
இதனையடுத்து 2016ஆம் ஆண்டில் 2018, 2020, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்று அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. பின்னர், ஒரு நேர்காணலில் பேசிய ஜேம்ஸ் கேமரூன் 2018ஆம் ஆண்டும் அவதாரை வெளியிட சாத்தியமற்றது என்று தெரிவித்தார். அதன்பின்னர் இப்படத்தை தயாரித்து வந்த ஃபாக்ஸ் நிறுவனம், அவதார் 2 முதல் 5ஆம் பாகம் வரையிலான ரிலீஸ் தேதிகளை போஸ்டர் வடிவில் வெளியிட்டது. அவதார் 2 டிசம். 18, 2020; 3ஆம் பாகம் டிசம். 17, 2021; 4ஆம் பாகம் டிசம். 20, 2024;  5ஆம் பாகம் டிசம். 19, 2025 என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
 


நியூசிலாந்தில் உருவாகிவரும் இப்படத்தின் ரிலீஸ் தேதிகள் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அவதார் 2 ஒருவருடம் தள்ளிப்போய் 2021 டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.அவதார் 3 - 22 டிசம்பர் 2023, அவதார் 4 - 19 டிசம்பர் 2025, அவதார் 5 - 18 டிசம்பர் 2027 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவதார் படக்குழு, 2ஆம் பாகத்திலிருந்து பண்டோரா என்னும் அவதார்கள் வாழும் உலகம் எப்படி இருக்கும் என்று நான்கு ஓவியங்களை ஸ்னீக் பீக்காக வெளியிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘உலக அரங்கில் இந்திய சினிமா’ - ஜேம்ஸ் கேமரூன் மகிழ்ச்சி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
James Cameron about rajamouli rrr

51வது சாட்டர்ன் விருதுகள் நடந்து முடிந்த நிலையில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் 2 படம் 4 விருதுகளை வென்றுள்ளது. இதற்காக விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இந்திய சினிமா குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் நடந்த கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் ராஜமௌலியை சந்தித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து பாராட்டியிருந்தார். இந்த நிலையில் சாட்டர்ன் விருது விழாவில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் அவருடன் அந்த நேரத்தில் நேர்மையாக இருந்தேன். இது அற்புதமானது என்று நான் நினைத்தேன். இந்திய சினிமா உலக அரங்கில் கவனம் ஈர்ப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என பதிலளித்தார். 

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது.

Next Story

பரபரப்பைக் கிளப்பிய நீர்மூழ்கிக் கப்பல் விபத்து - டைட்டானிக் இயக்குநர் பகீர் தகவல்

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

James Cameron about Ocean Gate accident

 

உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டைட்டானிக் கப்பல் விபத்து, இப்போது 111 ஆண்டுகளை கடந்துள்ளது. இன்று வரை அக்கப்பலை நீர்மூழ்கிக் கப்பலில் சென்று மக்கள் பார்த்து வருகின்றனர். அப்படி கடந்த 18ஆம் தேதி கப்பலை பார்வையிட 5 பேர் கொண்ட குழு சென்றுள்ளனர். அந்த நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனதை அடுத்து அதில் பயணித்த 5 பேரும் உயிர் இழந்துவிட்டதாக அமெரிக்க கடலோரக் காவல்படை அறிவித்திருந்தது. 

 

இந்த சம்பவம் தற்போது பரபரப்பைக் கிளப்பிய நிலையில் டைட்டானிக் படத்தை இயக்கியவரும், டைட்டானிக் படத்திற்க்காக 33 முறை கடலுக்கு அடியில்  சென்று டைட்டானிக் கப்பலை பார்த்தவருமான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தற்போது பேசியுள்ளார். 

 

அவர் பேசுகையில், "நீர்மூழ்கி கப்பல் மூலம் செல்வது மோசமான யோசனை தான் என்று நான் முன்பே நினைத்தேன்.ஆனால் அதை கண்டுபிடித்தவர் என்னை விட புத்திசாலி என்றும் கருதினேன். இருப்பினும் நான் அந்த தொழில்நுட்பத்தை ஒருபோதும் பரிசோதிக்கவில்லை. காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் வடிவமைப்புக் குறைபாடுகள் இருந்தது. மேலும் அந்த கப்பலின் முகம் பகுதி மோசமாக இருந்தது. அதோடு கப்பல் காணாமல் போன அதே நேரத்தில் பலத்த சத்தம் கேட்டது என்பதை ஒரு மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தினோம்" என தெரிவித்தார்.