ADVERTISEMENT

''உணர்ச்சி ரீதியாக இயக்கப்பட்டுள்ள படம்'' - படக்குழுவிற்கு அட்லீ வாழ்த்து!

08:54 AM May 29, 2020 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் (இன்று) மே 29- ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வரும் நிலையில் இயக்குனர் அட்லீ 'பொன்மகள் வந்தாள்' படத்தைப் பாராட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...


''அமேசான் பிரைமில் பொன்மகள் வந்தாள் படம். வலுவான செய்தி, உணர்ச்சி ரீதியாக இயக்கப்பட்டுள்ள படம். இயக்குனர் ஃப்ரெட்ரிக், ஜோதிகா மேம், சூர்யா சார், பார்த்திபன் சார் ஆகியோருக்கு இப்படம் பெருமை சேர்த்துள்ளது''



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT