இயக்குனர் அட்லி நிதியுதவி!

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. இதனைத் தொடர்ந்து வரிசையாக தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட மூன்று படங்கள் நடிகர் விஜய்யை வைத்து இயக்கினார்.

atlee

தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. இந்நிலையில் சினிமாத்துறையில் பணியாற்றும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் பலர் உதவி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் அட்லிஃபெப்சிக்குரூபாய் 5 லட்சம் நிதி அளித்து உதவியுள்ளார்.

atlee
இதையும் படியுங்கள்
Subscribe