Advertisment

"நாம் விரைவில் நம் நண்பர்கள், குடும்பங்களுடன் அங்கே செல்ல வேண்டும்" -நடிகை அதுல்யா ரவி

bfshfs

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பொதுமுடக்கம் சில தளர்வுகளுடன் செப்டம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி, மெட்ரோ ரயில் சேவைக்குஅனுமதி, பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி, வணிக வளாகங்கள் இயங்க அனுமதி, 75 நபர்கள் மிகாமல் திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதிஎன பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கிடையே கரோனா முடக்கம் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் சினிமா தியேட்டர்கள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கவில்லை. இதற்கு பல்வேறு திரைபிரபலங்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் நடிகை அதுல்யா ரவி தியேட்டர்கள் திறப்பது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்....

Advertisment

"நம் அனைவருக்கும் தியேட்டர்களில் நிகழ்ந்த பல கொண்டாட்டங்கள் மற்றும் நினைவுகள் இருக்கின்றன! இந்த கோவிட் 19 தொற்றுநோய் விரைவில் முடிவடைய பிரார்த்திப்போம். நாம் விரைவில் நம் நண்பர்கள் / குடும்பங்களுடன் திரையரங்குகளுக்கு திரும்ப வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

Advertisment

athulya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe