Skip to main content

‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் என் கதாபாத்திரம் இதுதான் - சஸ்பன்ஸை உடைத்த அதுல்யா

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

விக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சுட்டுப்பிடிக்க உத்தரவு. இப்படம் நாளை உலகம் முழுக்க வெளியாக இருக்கும் நிலையில், இப்படம் குறித்து அதுல்யா பேசும்போது....
 

athulya

 

 

“என்னுடைய பகுதி என்று வரும்போது சுட்டுப் பிடிக்க உத்தரவு முற்றிலும் புதுமையானது. இந்த படத்தில் வழக்கமான கமெர்சியல் அம்சங்கள், பாடல்கள் மற்றும் காதல் காட்சிகள் இல்லை. கோயம்புத்தூர் சேரியில் வாழும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்லும்  பெண்ணாக இப்படத்தில் நான் நடித்திருக்கிறேன்” என்றார்.
 

படத்தைப் பற்றி மேலும் கூறும்போது, "இந்த கதை ஒரு பெண்ணுக்கு நிகழும் ஒரு எதிர்பாராத சம்பவத்தை பற்றியது. ஒரு கொள்ளைக்கார கும்பல் அவள் வாழும் பகுதியில் நுழையும் போது அவள் என்ன செய்கிறாள் என்பதை பற்றியது. இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா என்னிடம் இந்த கதையை சொன்ன போதே, வேகமாக போகும் இந்த திரில்லர் படத்தில் என் பகுதிகள் தான் ஆறுதலாக இருக்கும் என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிட்டார். இந்த படத்தில் என் கதாபாத்திரம் சஸ்பென்ஸாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் இப்போது சொல்ல முடியும். இந்த படத்தில் ஒரு சேரி பெண்ணாக நடிக்க எந்தவிதமான சிறப்பு பயிற்சியையும் நான் எடுக்கவில்லை. உண்மையில், என் கதாபாத்திரம் அத்தகைய முயற்சிகளை கோரவில்லை. நான் கோயம்புத்தூர் பெண்ணாக நடிப்பதால், அதற்கேற்றவாறு வட்டார வழக்கில் மட்டும் பேச வேண்டியிருந்தது" என்றார்.
 

விக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருகிறார். சுஜீத் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” - வைரலாகும் லால்சலாம் டிரைலர்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 LAL SALAAM - Trailer

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.   

இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பது போல கதை அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ஆபத்தானவன், மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனிதநேயத்தை அதுக்கு மேல வை போன்ற வசனங்கள் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 

Next Story

ஆடியோ லாஞ்ச் அப்டேட் கொடுத்த ‘லால் சலாம்’ படக்குழு

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
lal salaam audio launch update

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இதையடுத்து ‘தேர்த் திருவிழா’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. 

இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் இம்மாத தொடக்கத்தில் பிப்ரவரி 9ல் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மாலை 4 மணி முதல் விழா தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.