Advertisment

மிஷ்கின் - அதர்வா இணையும் படம் குறித்து வெளியான புதிய தகவல்!

atharva

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சைக்கோ'. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இப்படத்தைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

Advertisment

பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை நிறைவு செய்துவிட்டு நடிகர் அதர்வாவை நாயகனாக வைத்து இயக்குநர் மிஷ்கின் படம் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் துவங்க இயக்குநர் மிஷ்கின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் மிஷ்கினின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளவர்கள் பட்டியலில் ஏற்கனவே சிம்பு மற்றும் அருண் விஜய் உள்ள நிலையில், தற்போது அதர்வாவும் இணைந்துள்ளார். எனவே, பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போதுதான் மிஷ்கின் யாரை வைத்து அடுத்ததாக படம் இயக்கவுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல நடிகர் அதர்வாவும் இயக்குநர் சற்குணம் மற்றும் பாலா ஆகியோரின் படங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

director mysskin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe