Skip to main content

“வந்தா மொத்தமா வராங்க” குழப்பத்தில் சினிமா காதலர்கள்...

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

இந்தியாவின் சினிமா மார்கெட் மிகவும் பெரியதாகிவிட்ட நிலையில், வாரா வாரம் ஏதாவது படங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதிலும் இந்த வார ரிலீஸ் நம்மை தலைசுற்ற வைக்கிறது. ஆமாங்க, நேரடி தமிழ் படங்களாக இரு படங்கள் வெளியாகிறது. மேலும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இரண்டு படங்கள் ரிலீஸாகிறது. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஜோக்கர் திரைப்படம் நேரடி ஆங்கில படமாகவே வெளியாகிறது.
 

asuran joker syeraa

 

 

அக்டோபர் 2ஆம் தேதியில் மூன்று படங்கள் வெளியாகிறது. ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகியுள்ள வார் திரைப்படம் ஹிந்தி மொழி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. ட்ரைலரை பார்க்கும்போதே செம ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்பது தெரிகிறது. இரண்டாவதாக சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜகபதி பாபு, சுதீப், நயன் தாரா, தமன்னா என இந்திய சினிமாவின் மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியிருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படமும் நாளை ரிலீஸாகிறது. ட்ரைலரை பார்க்கும்போது தெலுங்கில் வெளியாகும் இன்னொரு பாகுபலியாக இருக்கும் என்று தோன்றவைக்கிறது. மூன்றாவது படம்தான் ஜோக்கர். உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் டிசி காமிக்ஸிலிருந்து வெளியாகும் இந்த படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் உள்ளன. வெனிஸ் திரைப்பட விழாவில் வெளியான ஜோக்கர் திரைப்படம் பல்வேறு பாராட்டுக்களை பெற்றுள்ளதோடு சிறந்த படத்திற்காக கிடைக்கும் தங்க சிங்கம் விருதையும் பெற்றுள்ளது. இதனால் பலரும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். உலகம் முழுவதும் நான்காம் தேதி ரிலீஸாக இருக்கும் ஜோக்கர் படம் அதற்கு இரண்டு நாட்கள் முன்பே இந்தியாவில் வெளியாக இருப்பதால் இந்திய ரசிகர்கள் குஷியோ குஷி!

சரி இந்த இரண்டாம் தேதியை விட்டு வழக்கமான நம்ம வெள்ளிக்கிழமை தமிழ் படங்கள் ரிலீஸ் என்னவென்று பார்த்தால், அது அதுக்குமேல ஷாக் கொடுக்குது. தனுஷ் வேறமாதிரி புதுமையான ஒரு கதாபாத்திரத்தில், அதுவும் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதனால் அசுரன் முதல்பார்வை போஸ்டர் வெளியானபோதில் இருந்தே எதிர்பார்ப்புகள் எகிறின. எனவே இந்த படத்திற்கும் பலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வெக்கை என்னும் நாவலை வைத்து எடுக்கப்பட்ட இப்படம், தமிழ் சினிமாவில் இனி நாவலை மையமாக வைத்து பல படங்களை எடுக்க செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அதே தேதியில் வெளியாகும் 100 பெர்சண்ட் காதல் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜி.வி. பிரகாஷ், அசுரன் படத்தில் இசையமைத்திருக்கிறார்.

 

ad


அதே நேரம் அங்காமளி டைரீஸ் என்னும் மலையாள படத்தை எடுத்த லிஜோ ஜோஸ் பெலிஸ்ஸெரியின் ஜல்லிக்கட்டு படம் பல சினிமா காதலர்கள் மற்றும் மலையாள படம் காதலர்களின் எதிர்பார்ப்புடன் வெளியாகிறது. இந்த படம் மிகவும் குறைந்த தியேட்டர்களிலேயே வெளியானாலும் இத்தனை படங்களுக்கு நடுவில் வெளியாகிறது. ஆக மொத்தம் சினிமா காதலர்களின் மைண்ட் வாய்ஸ் “வந்தா மொத்தமா வாங்க, இல்லாட்டி ஒருத்தனும் வராதீங்க”

 

சார்ந்த செய்திகள்

Next Story

அசுரன் தெலுங்கு ரீமேக்கின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

asuran

 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'அசுரன்'. தமிழில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரித்தனர். தமிழில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க, மஞ்சுவாரியார் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்தார். இப்படத்திற்கு தெலுங்கில் 'நாராப்பா' எனப் பெயரிடப்பட்டது.

 

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீஸிற்கு தயாரான வேளையில், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், 'நாராப்பா' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்த தயாரிப்பு தரப்பு, சில முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், அமேசான் நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டது. இதனையடுத்து, நாராப்பா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நாராப்பா திரைப்படம் அமேசான் தளத்தில் வரும் ஜூலை 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாராப்பா ரிலீஸ் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

கோல்டன் குளோப் விருது விழாவிற்கு இரு தமிழ்ப்படங்கள் தேர்வு!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

golden globe

 

ஆஸ்கார் விருதிற்கு அடுத்தபடியாக, உலகத் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படக்கூடிய மற்றும் கௌரவமாகக் கருதக்கூடிய விருது கோல்டன் குளோப் விருது ஆகும். இவ்விருது விழாவானது வருடந்தோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவது வழக்கம். ஆங்கில படங்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பிற மொழிப்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இதில் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த வருடம் ஃபிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 78-வது கோல்டன் குளோப் விருது விழாவிற்கு, இரு தமிழ்ப்படங்கள் தேர்வாகியுள்ளன.

 

அவை, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படமும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படமும் ஆகும். இதனையடுத்து, உற்சாகமான இவ்விரு நடிகர்களின் ரசிகர்கள், தங்களது மகிழ்ச்சியை சமுக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.   

 

உலகம் முழுவதிலும் இருந்து வந்த 127 படங்களில் இருந்து 50 திரைப்படங்களை நடுவர்கள் குழு திரையிடுதலுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. திரையரங்கில் வெளியாகும் படங்கள் மட்டுமே இவ்விருதுவிழாவில் பங்கேற்க முடியும் என்ற விதியானது, கரோனா நெருக்கடி நிலை காரணமாக, ஓடிடி-யில் வெளியாகும் படங்களும் பங்கேற்கலாம் என மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.