விஷால் வீட்டில் தாக்குதல் - காவல் நிலையத்தில் புகார்

Assault at Vishal's house

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தனது குடும்பத்துடன் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார். கடந்த 26ஆம் தேதி விஷால் வீட்டை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த தாக்குதலில், வீட்டின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. விஷால் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் என்பவர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், செப்.26ஆம் தேதி இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விஷால் வீட்டை தாக்கினர். அதற்கு ஆதாரமாக எங்கள் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை இதில் கொடுத்துள்ளோம். எனவே புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்டு விஷால் இல்லத்தை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

actor vishal police
இதையும் படியுங்கள்
Subscribe